நேற்று தான் எனக்கு இப்படி ஒரு நோய் இருப்பது தெரிந்தது, இனி படங்களை இயக்க மாட்டேன் – பிரேமம் இயக்குனர் வெளியிட்ட அதிர்ச்சி பதிவு.

0
259
Alphonse
- Advertisement -

சினிமாவிலிருந்து விலகுகிறேன் என்று பிரேமம் இயக்குனர் பதிவிட்டு இருக்கும் பதிவு தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மலையாள சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் அல்போன்ஸ் புத்திரன். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு தமிழ் மற்றும் மலையாள மொழியில் வெளியாகி இருந்த நேரம் என்ற படத்தின் மூலம் தான் இயக்குனராக சினிமா உலகில் அறிமுகம் ஆகியிருந்தார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் நிவின் பாலி, நஸ்ரியா நசீம் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அல்போன்ஸ் அவர்கள் 2015ஆம் ஆண்டு நிவின் பாலியை வைத்து பிரேமம் என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில் சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபாஸ்டின் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் மலையாள மொழி ரசிகர்கள் மத்தியில் மட்டுமில்லாமல் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

- Advertisement -

அல்போன்ஸ் புத்திரன் திரைப்பயணம்:

இதனால் மலையாள சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக அல்போன்ஸ் மாறினார்.
இன்றும் பிரேமம் படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த படம் பிற மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டு இருந்தது. மேலும், இந்த படத்தில் நடித்த நடிகர்கள் பலர் தற்போது தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களாக திகழ்கிறார்கள். இதனைத் தொடர்ந்து அல்போன்ஸ் அவர்கள் இயக்குனர் என்பதையும் தாண்டி தயாரிப்பாளர், நடிகர், ரைட்டர், எடிட்டர் என பல பணிகளை செய்து வருகிறார்.

அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் படம்:

மேலும், பிரேமம் படத்தின் வெற்றிக்கு பின்னர் 7 ஆண்டுகள் படம் இயக்காமல் இருந்தார் அல்போன்ஸ் புத்திரன். பின்னர் இவர் கோல்டு என்கிற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் பிருத்விராஜ், நயன்தாரா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் மிக பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கோல்டு திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இதன் பின்னர் அல்போன்ஸ் தமிழ் சினிமா பக்கம் திரும்பி விட்டார்.

-விளம்பரம்-

அல்போன்ஸ் பதிவு:

தற்போது இவர் கிஃப்ட் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சாண்டி மாஸ்டர் ஹீரோவாக நடிக்கிறார். அவருடன் கோவை சரளா, சம்பத் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சினிமாவில் இருந்து விலகுவதாக இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் கூறி இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இது தொடர்பாக இன்ஸ்டகிராம் பதிவில் அல்போன்ஸ், எனக்கு ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் டிசார்டர் (autism spectrum disorder) எனப்படும் அரியவகை நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

அல்போன்ஸ் சினிமாவை விட்டு விலக காரணம்:

நான் யாருக்கும் சுமையாக இருக்க விரும்பவில்லை. அதனால் நான் என்னுடைய திரையரங்க சினிமா பயணத்தில் இருந்து விலகுகிறேன். இருந்தாலும், நான் பாடல் வீடியோக்கள், குறும்படங்கள், ஓடிடிக்கான படங்கள் ஆகியவற்றை தொடர்ந்து இயக்குவேன். எனக்கு சினிமாவை விட்டு விலக விருப்பமில்லை, ஆனால், வேறு வழியில்லை. மோசமான உடல்நிலையும், எதிர்பார்க்க முடியாத வாழ்க்கையும் இருந்தால் இப்படிதான் இண்டர்வெல் பஞ்ச் போல் டுவிஸ்ட் இருக்கும் என்று வேதனையில் பதிவிட்டு இருக்கிறார். மேலும், அல்போன்ஸ் புத்திரன் அவர்கள் autism spectrum disorder என்ற மூளை சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். பின் இந்த பதிவை போட்ட சில மணி நேரங்களில் அல்போன்ஸ் புத்திரன் நீக்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement