சினிமாவில் 18 ஆண்டுகள் கழித்து கிடைத்த அங்கீகாரம் – தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து பிரிதிவிராஜ் போட்ட பதிவு.

0
380
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் புகழ் பெற்ற நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் பாண்டியராஜன். இவரை புதுமைக் கலை மன்னன் என்று தான் எல்லோரும் அழைப்பார்கள். இவர் சென்னையை சேர்ந்தவர். இவர் 1959-ஆம் வருடம் அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி பிறந்தார். இவர் தன்னுடைய பள்ளிப்படிப்பை சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மாதிரி உயர்நிலைப் பள்ளியில் முடித்தார். கலைத்துறையின் மேலுள்ள ஈடுபாட்டால் தன்னுடைய இளம் வயதிலேயே திரைத்துறையில் சேர்ந்தார். மேலும், சினிமாவிற்கு தோற்றம், உயரம் முக்கியம் இல்லை என்பதை நிரூபித்த ஒரு கலைஞர்.

-விளம்பரம்-

பாண்டியராஜன் அவர்கள் 1986ஆம் ஆண்டு வாசுகி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அன்றைய காலத்தில் இயக்குனராக, தயாரிப்பாளராக, பாடலாசிரியராக வலம் வந்த அவிநாசி மணியின் மகள் தான் வாசுகி. பாண்டியராஜன் மற்றும் வாசுகி ஆகியோருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். பல்லவராஜன், பிரித்திவ் ராஜன் , பிரேம்ராஜன். இதில் இரண்டாவது மகன் பிரத்திவ் ராஜன் படங்களில் நடித்து வருகிறார்.

- Advertisement -

கடந்த 2006ஆம் ஆண்டு தன் அப்பா பாண்டியராஜன் இயக்கத்தில் ‘கைவந்த கலை’ என்ற படத்தில் அறிமுகம் ஆனார்.அதோடு இந்திய சினிமா துறையினருக்கு வைக்கப்பகப்டும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்கில் விளையாடி வருகிறார் பிரித்திவ் ராஜன். பிறகு இவர் வாய்மை, முப்பரிமாணம் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.ஆனால், தந்தை அளவிற்கு இவரால் சினிமாவில் சரியான பெயரை எடுக்க முடியவில்லை.

இப்படி ஒரு நிலையில் ப்ளூ ஸ்டார் படத்தின் மூலம் பலரின் பார்வையை தனது பக்கத்தில் திருப்பி இருக்கிறார் பிரிதிவிராஜ். அறிமுக இயக்குனர் எஸ் ஜெயக்குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ப்ளூ ஸ்டார். இந்த படத்தை பா ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன் தயாரித்திருக்கிறது. இந்த படத்தில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், பகவதி பெருமாள் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

கோவிந்த் வசந்த் இந்த படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து இயக்குனர் கதைக்களத்தை கொடுத்திருக்கிறார். ஊர் தெரு மற்றும் காலனி தெரு மக்களுக்கு இடையே நடக்கும் கிரிக்கெட் போட்டியும் அதனால் ஏற்படும் பிரச்சனை குறித்து தான் படத்தில் பேசப்பட்டிருக்கிறது. அதோடு ஊர் தெரு மற்றும் காலனி தெரு மக்கள் இணைந்தால் என்ன நடக்கும்? என்பதையும் இயக்குனர் படத்தில் காண்பித்திருக்கிறார்.

இந்த படத்தில் எதார்த்தமாக படைக்கப்பட்ட ரஞ்சித், ஆனந்தி, ராஜேஷ், சாம் என ‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படத்தின் பல கதாபாத்திரங்களை மக்கள் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக, சாமின் கவிதைகளுக்கு திரையரங்கத்தில் சிரிப்பும், விசில் சத்தமும் பறக்கிறது. பல ஆண்டுகள் கழித்து தனக்கு கிடைத்து இருக்கும் இந்த அங்கீகரம் குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது தந்தையுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் ‘ மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை
என்நோற்றான் கொல் எனும் சொல்’ என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement