‘கப்பு முக்கியம் பிகிலே’ – வீட்டில் புட் பால் விளையாடி பிரியா பவானி ஷங்கர் பதிவிட்ட வீடியோ.

0
1581
priya-bhavani
- Advertisement -

திரையுலகில் பணியாற்றும் அனைவருக்கும் ஒரு தனித்துவமான திறமை இருக்கும். ஆனால், அந்த திறமையையும் தாண்டி லக் என்ற விஷயமும் எப்போது வருகிறதோ, அப்போது தான் வாய்ப்புகள் குவியும். அப்படி குவியும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டவர்கள் ஏராளம். அவர்கள் அனைவரும் அடுத்தடுத்து திரையுலகில் பல சாதனைகள் செய்து வெற்றியடைகிறார்கள். இந்த லிஸ்டில் பிரபல நடிகை ப்ரியா பவானி ஷங்கருக்கும் நிச்சயம் ஒரு இடம் உண்டு.

-விளம்பரம்-

ஒரு செய்தி வாசிப்பாளராக புதிய தலைமுறை சேனலில் தன் பயணத்தை தொடங்கியவர் ப்ரியா பவானி ஷங்கர். அதன் பிறகு ‘கல்யாணம் முதல் காதல் வரை’ என்ற சீரியலில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்திக் கொண்ட ப்ரியா பவானி ஷங்கரின் நடிப்புக்கு ரசிகர்களும் லைக்ஸ் போட ஆரம்பித்தனர்.

இதையும் பாருங்க : டிக் டாக்கில் இணைந்த ரம்யா. அவர் பதிவிட்ட முதல் வீடீயோவை பாருங்க.

- Advertisement -

அந்த லைக்ஸின் விஸ்வரூபம் தான் ப்ரியா பவானி ஷங்கரை, வெள்ளித்திரையிலும் அடி எடுத்து வைக்க வழி வகுத்து கொடுத்தது. ஆம்.. ‘மேயாத மான்’ என்ற தமிழ் திரைப்படம் 2017-ஆம் ஆண்டு வெளி வந்தது. இதில் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை ப்ரியா பவானி ஷங்கர். வைபவ் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தினை ரத்ன குமார் இயக்கியிருந்தார்.

‘மேயாத மான்’ சூப்பர் ஹிட்டானதும், அடுத்தடுத்து ப்ரியா பவானி ஷங்கரின் கால்ஷீட் டைரியில் “கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா : அத்தியாயம் ஒன்று” என படங்கள் குவிய ஆரம்பித்தது. இதில் ‘மாஃபியா : அத்தியாயம் ஒன்று’ படம் ப்ரியா பவானி ஷங்கருக்கு ரொம்பவும் ஸ்பெஷல். ஏனெனில், இந்த படத்தில் ஆக்ஷனிலும் மாஸ் காட்டியிருந்தார் ப்ரியா பவானி ஷங்கர்.

-விளம்பரம்-

தற்போது, ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருவதால், ‘144’ போடப்பட்டுள்ளது. திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ப்ரியா பவானி ஷங்கர் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “லாக் டவுனில் நான் ப்ளே ஸ்டேஷனில் FIFA Football விளையாடிக் கொண்டிருக்கிறேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.

இதையும் பாருங்க : திடீரென்று விஜய் அஜித் ரசிகர்களை எச்சரித்த விவேக். காரணம் இது தான்.

மேலும், விளையாடிக் கொண்டிருக்கும்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவின் முடிவில், Goal போட்டுவிட்டு “கப்பு முக்கியம் பிகிலு” என்று ‘பிகில்’ படத்தில் விஜய் பேசிய வசனத்தை பேசியிருந்தார் ப்ரியா பவானி ஷங்கர். ‘மாஃபியா : அத்தியாயம் ஒன்று’ படத்துக்கு பிறகு 7 தமிழ் படங்களும், ஒரு தெலுங்கு படமும் கைவசம் வைத்திருக்கிறார் ப்ரியா பவானி ஷங்கர்.

Advertisement