இந்திய அரசியலையும் சினிமாவையும் பிரித்து பார்க்கவேய முடியாது. சினிமா துறையில் இருந்து பல நடிகர் நடிகைகள் அரசியலில் குதித்துள்ளனர். தென்னிந்திய நடிகைகள் நக்மா, ரோஜா துவங்கி இந்தி நடிகை ஸ்மிர்தி இராணி வரை தற்போது பலரும் அரசியலில் கலக்கி வருகின்றனர்.
இந்த நிலையில் பிரபல இந்தி நடிகையான பிரியங்கா சோப்ராவும் அரசியலில் குதிக்க போவதாக கூறியுள்ளார். மூத்த நடிகைகள் மட்டுமல்லாமல் இளம் ஹீரோயின்களும் அரசியலில் குதிப்பது சகஜமாகிவிட்டது. இந்நிலையில் நடிகை பிரியங்கா சோப்ராவிற்கு அரசியல் ஆசை கிடையாதாம், ஆனால் பிரதமர் ஆகணுமாம்.
தமிழில் விஜய் நடித்த ‘தமிழன்’ படம் மூலம் அறிமுகமானவர் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, பல ஆண்டுகளாக ஹிந்தி சினிமாவில் முடி சூடா ராணியாக இருந்து வருகிறார். மிஸ் இந்தியா ஆகியன இவர் பல ஆண்டுகளாக இந்திய சினிமாவில் கலக்கி வந்தார். மேலும் இந்திய சினிமாவை தாண்டி ஹாலிவுட் வரை சென்று தனது திறமையை நிரூபித்து காட்டியவர்.
பிரியங்கா சோப்ரா, தன்னை விட 10 வயது சிறியவராக பிரபல ஹாலிவுட் பாடகரான நிக் ஜோனாஸ் என்பவரை நீண்ட வருடங்களாக காதலித்து வந்தார் பின்னர் அவரை திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்து சில வாரங்களிலேயே இருவரும் விவாகரத்து செய்யவிருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது பின்னர் அது பொய்யான தகவல் என்று தெரியவந்தது.
பிரியங்கா சோப்ரா, திருமணத்திற்கு பின்னர் தனது கணவர் நிக் ஜோனசூடம் இங்கிலாந்தில் செட்டில் ஆகிவிட்டார். மேலும், திரைப்படங்களில் நடிப்பதையும் நிறுத்தி விட்டார். இருப்பினும் அவ்வப்போது பேட்டிகளில் பங்கேற்று வருகிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பிரியங்காவிடம் அரசியலில் குதிப்பீர்களா என்றதற்கு அதிர்ச்சியான பதில் அளித்தார்.
அதில் ‘எனக்கும், என் கணவர் நிக் ஜோனஸுக்கும் அரசியல் சார்ந்த விஷயங்கள் பிடிக்காது. ஆனாலும் நான் பிரதமர் பதவிக்கும், நிக் ஜோனஸ் ஜனாதிபதி பதவிக்கும் போட்டியிட விரும்புகிறேன். இருவரும் இணைந்து ஒரு மாற்றத்தை உருவாக்க முடியும் என நம்புகிறேன்’ என குறிப்பிட்டார் பிரியங்கா சோப்ரா. விவரம் தெரியாமல் பேசும் பிரியாங்காவின் பதில் சிறுபிள்ளைத்தனமாக இருப்பதாக பலரும் அவரை விமர்சித்திருக்கிறார்கள். இதனால் சமூக வலைத்தளங்களில் பிரியங்கா சோப்ராவை பலரும் கடுமையாக கலாய்த்து வருகின்றனர்.