விஜே பிரியங்கா கணவர் வசி குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஃபேவரட் தொகுப்பாளராக இருப்பவர் பிரியங்கா. சொல்லப்போனால் டிடிக்கு பிறகு ரசிகர்கள் கூட்டம் அதிகம் இருப்பது பிரியங்காவுக்கு தான். இவர் வாயாடி தொகுப்பாளினி என்று பெயர் எடுத்தவர். இவருடைய பேச்சும், சுட்டி தனமும் ரசிகர்களை சீக்கிரமாகவே கவர்ந்தது. அதிலும் இவரின் பிரபலமே சிரிப்பு தான். இதனாலேயே இவர் குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார்.
இவர் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். அதிலும் விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பல வருடங்களாக பிரியங்கா தான் தொகுத்து வழங்கி இருக்கிறார். பின் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியையும் பிரியங்கா தான் தொகுத்து வழங்கி வருகிறார். பின் இவர் பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். மேலும், பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பிரியங்கா டைட்டில் வின்னர் ஆகவில்லை என்றாலும் நிகழ்ச்சியில் ரன்னர் அதாவது இரண்டாம் இடத்தை பிடித்தார்.
தொகுப்பாளர் பிரியங்கா குறித்த தகவல் :
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிரியங்கா ‘குக் வித் கோமாளி சீசன் 5’ நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். கடைசியில் சிறப்பாக சமைத்து டைட்டில் பட்டத்தை பிரியங்கா வென்றார். தற்போது பிரியங்கா வழக்கம் போல் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இதனிடையே பிரியங்கா கடந்த 2016 ஆம் ஆண்டு பிரவீன் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆகி கொஞ்ச நாட்கள் தன்னுடைய கணவரைப் பற்றியே பேசி வந்த பிரியங்கா திடீரென்று தன் கணவரை பற்றி பேசுவதை நிறுத்திவிட்டார்.
ப்ரியங்கா திருமணம்:
இதனால் ரசிகர்கள் எல்லோருமே கேள்வி எழுப்பினார்கள். அதற்குப் பின் பிரியங்காவிற்கும் அவருடைய கணவருக்கும் கருத்து வேறுபட்டு பிரிந்து விட்டார்கள் என்று தெரிந்தது. மேலும், சில தினங்களுக்கு முன் பிரியங்கா வெளிநாட்டில் ரகசியமாக வசி என்பவரை தான் திருமணம் செய்து இருக்கிறார். இந்த திருமணத்தில் பிரியங்காவின் குடும்பம், உறவினர்கள் மட்டும் கலந்து இருந்தார்கள். இந்த திருமணத்தில் அமீர், பாவனி, அன்ஷிதா உட்பட பலர் கலந்து கொண்டிருந்தார்கள். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.
ப்ரியங்கா கணவர் குறித்த தகவல்:
தற்போது பிரியங்காவின் கணவர் வசி யார் என்று குறித்து தான் பலருமே கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
வசி டிஜேவாக பணியாற்றி வருகிறார். இவர் கார்ப்பரேட் நிகழ்ச்சிகள், பப்புகளில் டிஜேவாக பணியாற்றி இருக்கிறார். இது மட்டும் இல்லாமல் இவர் மேனேஜ்மென்ட் கம்பெனி ஒன்றையும் நடத்தி வருகிறார். ஏற்கனவே நிகழ்ச்சி ஒன்றில் பிரியங்காவும் வசியும் சந்தித்து பேசி இருக்கிறார்கள். ஆரம்பத்தில் இவர்கள் இருவரும் நட்பாக பழகி வந்தார்கள். அதற்கு பின் இவர்களுக்கிடையில் காதல் மறந்தது. கடந்த 2022 ஆம் ஆண்டு இருவருமே காதலிக்க தொடங்கி தற்போது திருமணம் செய்து கொண்டார்கள்.
வசி குடும்பம்:
இந்த நிலையில் வசி, அவருடைய குடும்பம் குறித்த தகவல் தான் தற்போது வைரலாகி வருகிறது. வசி ஈழத்தமிழர். இவர் இலங்கை திரிகோணமலையில் வசித்து வருகிறார். இலங்கை வாழ் தமிழர்களுடைய ஆதரவை பெற்ற இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவராக இருந்தவரும், இலங்கை நாடாளமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தவர் ரா. சம்பத். இவருடைய தங்கை மகன் தான் வசி. அரசியல் பின்னணியை சேர்ந்த குடும்பத்திற்கு மருமகளாக தான் பிரியங்கா சென்றிருக்கிறார்.