‘உங்களுக்கு தேவையானதை அதிகமாகக் கற்பனை செய்யாதீர்கள்’ வைரலாகும் சீரியல் நடிகைகளின் பதிவு

0
281
- Advertisement -

மீண்டும் சீரியலில் இருந்து பிரியங்கா நல்காரி விலக இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றி நடைப்போட்ட ரோஜா சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியங்கா. சில வருடமாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றி நடை போட்ட தொடர்களில் ‘ரோஜா’ சீரியலும் ஒன்று. இந்த தொடர் கடந்த 2018 ஆம் இந்த ஆண்டு துவங்கப்பட்டது. கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் வெற்றிகரமாக ஓடிய இந்த சீரியல் கடந்த ஆண்டு தான் நிறைவடைந்தது.

-விளம்பரம்-

மேலும், ரோஜா சீரியலில் நாயகியாக நடித்தவர் பிரியங்கா. இவர் முதலில் தெலுங்கு மொழி சீரியல்களில் நடித்து இருந்தார். அதன் பின் இவர் தெலுங்கு மொழியில் வெளிவந்த பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார். பின் இவர் தமிழில் ரோஜா சீரியல் மூலம் மக்கள் தமிழில் அறிமுகமானார். இந்த சீரியல் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது. இதனை தொடர்ந்து பிரியங்கா ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீதாராமன் என்ற தொடரில் நாயகியாக நடித்தார்

- Advertisement -

இந்த தொடர் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனிடையே நடிகை பிரியங்கா, தெலுங்கு சீரியல் நடிகர் ராகுலை காதலித்து வந்தார். பின் பிரியங்காவிற்கும் ராகுலுக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு நிச்சயதார்தம் முடிந்தது. ஆனால், சில காரணங்களால் இவர்கள் திருமணம் நின்று விட்டது. பின் கடந்த ஆண்டு தான் ப்ரியங்காவிற்கும் ராகுலுக்கும் விநாயகர் கோவிலில் படு சிம்பிளாக திருமணம் நடைபெற்றது.

அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரியங்கா பதிவிட்டு இருந்தார். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி இருந்தார்கள். மேலும், திருமணத்திற்கு பின் பிரியங்கா சீரியலில் நடித்து தான் வந்தார். ஆனால், அவர் கணவருக்கு பிரியங்கா நடிப்பதில் விருப்பம் இல்லை என்று சொன்னதால் சீதாராமன் சீரியலில் இருந்து நாயகி பிரியங்கா வெளியேறி விட்டார். தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நள தமயமந்தி தொடரில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

சீரியலை விட்டு விலகும் நடிகை:

மேலும், இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுக்கொண்டு சென்றிருக்கின்றது. இப்படி இருக்கும் நிலையில் இந்த சீரியலில் இருந்து கதாநாயகியாக நடித்த பிரியங்கா நல்காரி விலக இருப்பதாகவும் இவருக்கு பதில் தெய்வம் தந்த பூவே தொடரில் நடித்திருந்த ஸ்ரீநிதி நடிப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இதை நடிகை ஸ்ரீநிதி அவருடைய சோசியல் மீடியா பக்கத்தில் ஷேர் செய்து இருக்கிறார். பலரும் அவருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்து இருந்தார்கள்.

ப்ரியங்கா பதில்:

இந்நிலையில் இது குறித்து பிரியங்கா அவர்கள் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், உங்களுக்கு தேவையானதை நிறைய கற்பனை செய்யாதீர்கள். அதோடு வதந்திகளை பரப்பாதீர்கள். நான் சீரியலில் இருந்து வெளியேறவில்லை. என்னுடைய அடுத்த ஷெட்டியூளுக்காக காத்திருக்கிறேன். என்ன நடந்தது? என்ன காரணம்? என்பதை பற்றி நீங்கள் அனைவரும் விரைவில் தெரிந்து கொள்வீர்கள். நன்றி என்று கூறியிருக்கிறார். இதன் மூலம் பிரியங்கா நல்காரி சீரியலில் இருந்து விலகவில்லை என்பது உறுதியாகி இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் தற்போது இவர் தன்னுடைய பிறந்தநாளை கணவருடன் சேர்ந்து கொண்டாட மலேசியா சென்று இருக்கிறார்.

Advertisement