15 லட்சம் மோசடி செய்தேனே ? நடந்து என்ன ? தன் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரத்துடன் ரவீந்தர் பதில்.

0
1923
- Advertisement -

தன் மீதான பணம் மோசடி குறித்த புகாருக்கு தயாரிப்பாளர் ரவிந்தர் கொடுத்திருக்கும் பதிலடி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் ‘நட்புன்னா என்ன தெரியுமா, முருகைக்காய் சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்தவர் ரவீந்தர். இவரை சினிமா தயாரிப்பளராக தெரிந்ததை விட பலருக்கும் இவரை பிக் பாஸ் விமர்சகராக தான் அதிகம் தெரியும். அதுவும் வனிதா பங்கேற்ற பிக் பாஸ் சீசனில் வனிதா குறித்த இவரது விமர்சனங்கள் பெரும் பிரபலமானது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் இவர் கடந்த ஆண்டு நடிகை மஹாலக்ஷ்மியை திருமணம் செய்து கொண்டார். சின்னத்திரை சிரியலில் மிக பிரபலமான நடிகையாக மகாலக்ஷ்மி திகழ்ந்து வருகிறார். இவர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் வீடியோ ஜாக்கியாக தான் கேரியரை தொடங்கினார். பின் இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கும் தொகுப்பாளினியாக இருந்து இருக்கிறார். அதன் பின் இவர் சீரியலில் நடிக்க தொடங்கினார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருக்கிறது.

- Advertisement -

ரவீந்தர்-மஹாலக்ஷ்மி திருமணம்:

தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலில் வில்லியாக மிரட்டி வருகிறார். இப்படி ஒரு நிலையில் மஹாலக்ஷ்மி, தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டு இருக்கிறார். இது இருவருக்குமே மறுமணம் தான். இவர்களுடைய திருமணம் பெரிய அளவில் பேசப்பட்டது. மேலும், இவர்களது திருமண செய்தி வெளியானத்தில் இருந்தே சமூக வளைத்தளத்தில் கேலிக்கு உள்ளாகி இருந்தது. ஆனால், அதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் தங்கள் வாழ்க்கையை சந்தோசமாக இருவரும் வாழ்ந்து வருகிறார்கள்.

விஜய் அளித்த புகார்:

திருமணத்திற்கு பின் இருவரும் தங்களின் புகைப்படங்களை அடிக்கடி சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் தயாரிப்பாளர் ரவிந்தர் மீது பண மோசடி புகார் எழுந்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது. அதாவது, அமெரிக்க வாழ் இந்தியர் விஜய் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் ரவீந்தர் மீது பண மோசடி புகார் அளித்து இருக்கிறார். அதில் அவர், நான் சென்னை அண்ணா நகர் பகுதியில் வசித்து வந்தபோது கிளப் ஹவுஸ் என்ற சமூகவலைதள செயலி மூலமாக தயாரிப்பாளர் ரவீந்தருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.

-விளம்பரம்-

ரவீந்தர் செய்த பணமோசடி:

கடந்த ஆண்டு மே மாதம் 8ம் தேதி நடிகர் ஒருவருக்கு அட்வான்ஸ் தரவேண்டும் எனக்கூறி சமூகவலைதள செயலி வழியாக தயாரிப்பாளர் ரவீந்தர் என்னிடம் 20 லட்ச ரூபாய் பணம் கேட்டார். என்னிடம் 15 லட்சம் ரூபாய் மட்டுமே இருப்பதாக கூறினேன். பின் நான் இரண்டு தவணையாக 10 லட்சம் மற்றும் 5 லட்சம் பணத்தை ரவீந்தரின் நிறுவனமான லிப்ரா ப்ரோடக்ஷன் வங்கி கணக்கிற்கு அனுப்பினேன். பணத்தை பெற்றுக்கொண்ட ரவீந்தர் அதை கடந்த ஆண்டு மே 25ஆம் தேதியே திருப்பிக் கொடுத்து விடுவதாக கூறினார். ஆனால், ரவீந்தர் சொன்னபடி பணத்தை திருப்பி தரவில்லை.

ரவீந்தர் கொடுத்த விளக்கம்:

ரவீந்தரிடம் பணம் கேட்டதற்கு தொடர்ந்து அலைக்கழித்ததார். ஒருகட்டத்தில் எனது மனைவியும் ரவீந்தரை தொடர்பு கொள்ள முற்பட்டார். அப்போது என் செல்போன் நம்பரை பிளாக் செய்துவிட்டார். மேலும் அவர் அவதூறாக பேசினார் என்று கூறி ரவீந்திரன் பணம் கேட்டதற்கான ஆதாரம், அவர் பணம் கேட்டு பேசிய ஆடியோ போன்றவற்றை அமெரிக்காவிலிருந்து ஆன்லைன் மூலம் சென்னை காவல் ஆணையருக்கு புகாராக கொடுத்து இருக்கிறார் விஜய். இதனை அடுத்து இந்த புகார் தொடர்பாக தயாரிப்பாளர் ரவீந்தர் கூறியிருப்பது, பணம் தர ஒப்புக்கொண்டு செக் அனுப்புவதாக சொன்னோம். பின் விஜய் சமாதானமாக செல்ல இருக்கிறார். அதோடு விஜய் புகாரை வாபஸ் பெறுவதற்கான நடவடிக்கை சென்று கொண்டிருக்கின்றது.

Advertisement