லாரன்ஸ் – ஸ்ரீரெட்டி விசயத்துல என்ன நடந்துச்சு.! பரபரப்பை கிளப்பிய தயாரிப்பாளர்.!

0
709
Seeman
- Advertisement -

கடந்த இரண்டு நாட்களாக லாரன்ஸ் மற்றும் சீமானுக்கு இடையிலான கருத்து மோதல் தான் சமூக வலைத்தளத்தில் வைரலாகி பரவி வருகிறது. ராகவா லாரன்ஸ் தன்னுடைய முகநூல்பக்கத்தில் . நீண்ட பதிவு ஒன்றினை எழுதியிருந்தார்.

-விளம்பரம்-

அந்த பதிவில், நாம் தமிழர் கட்சியை நேரடியாக குறிப்பிடாமல், அவர்களது தொண்டர்கள் தமக்கும், தன்னுடைய மாற்றுத்திறனாளி பசங்களுக்கும் தொடர்ச்சியாக தொல்லை கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளார். மேலும், சீமானுக்கு சவாலையும் விடுத்திருந்தார். இதை தொடர்ந்து சீமான், லாரன்சுக்கு வருத்தம் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி லாரன்ஸை விமர்சித்து பேசியுள்ளார். அதில், உங்களுடைய குற்றச்சாட்டால் அண்ணன் சீமானுக்கு எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. அவருடைய தம்பிகளில் ஒருவரான நானே பதில் சொன்னால் போதும் என்று நினைக்கிறேன். நீங்கள் எச்சரிக்கையும், சவாலும் விடும் அளவிற்கு அப்படி என்ன தான் நடந்தது.

Image result for suresh kamatchi lawrance

எங்கள் நோக்கம் போராட்டம் அனைத்தும் வேறு பக்கம் உள்ளது. உங்களை நினைக்க கூட நேரம் இல்லை. ஸ்ரீரெட்டி சொன்ன குற்றச்சாட்டுக்கு முதல்ல பதில் சொல்லுங்க. அதை விட்டு இங்கு வந்து ஏன் முட்டணும்.ஸ்ரீரெட்டி விசயத்துல வாய்ப்பை கொடுத்து வாயடைத்து உங்களால என்ன பேச முடியும் என்று கூறியுள்ளார் பேசியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement