நடிகையின் பாலியல் தொல்லை வழக்கு – திலீப்புக்கு ஆதரவாக நின்ற சுரேஷின் தந்தை. என்ன கூறியுள்ளார் பாருங்க.

0
538
dileep
- Advertisement -

நடிகர் திலீப்புக்கு கிரிமினல் முத்திரை குத்த சிலர் முயல்கிறார்கள் என்று திரைப்பட தயாரிப்பாளரும் நடிகையின் தந்தையுமான சுரேஷ் குமார் குற்றம் சாட்டியுள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மலையாள திரை உலகில் பிரபலமான நடிகர் திலீப். இவர் கேரளாவை சேர்ந்த பிரபல நடிகையை 2017ம் ஆண்டு காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு இன்று வரை நீண்டு கொண்டே சென்றிருக்கிறது. இந்த வழக்கில் நடிகர் திலீப் உள்ளிட்ட பலர் கைது செய்தனர். 85 நாட்கள் சிறைவாசம் அனுபவித்த பிறகு நடிகர் திலீப் ஜாமினில் வெளியே வந்து இருந்தார். மேலும், இந்த வழக்கு விசாரணையை 6 மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தர விட்டது.

-விளம்பரம்-

உடனே திலீப்பின் நண்பரும், இயக்குனருமான பாலச்சந்திரகுமார் தன்னைக் கைது செய்த போலீஸ் அதிகாரிகளை பழிவாங்குவது குறித்து திலீப் ஆவேசத்துடன் பேசியதை நீதிமன்றத்தில் கூறினார். இதை தொடர்ந்து போலீஸ் நடிகர் திலீப்பை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும், இந்த வழக்கில் இவருக்கு ஜாமீன் மனு கடந்த 15 நாட்களாக கேரள உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக திலீப்புக்கு தெரிந்த செல்போன் ரிப்பேர் செய்யும் டெக்னீசியன் சைலேஷ் என்பவர் சாலை விபத்தில் காலமானார்.

- Advertisement -

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய திலீப்:

இந்த வழக்கிலும் திலீப்புக்கு தொடர்பு இருப்பதால் அதனால் இந்த விபத்து வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று இறந்து போன சைலேஷ் குடும்பத்தினர் கேரள அரசிடம் கோரிக்கை வைத்து இருக்கின்றனர். இப்படி எல்லா பக்கங்களிலிருந்தும் திலீப்பின் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் எல்லா பிரச்சினைகளையும் சமாளிக்கும் நடிகர் திலீப்புக்கு கை கொடுத்திருக்கிறார் தயாரிப்பாளர் சுரேஷ் குமார். இவர் நடிகை மேனகாவின் கணவர் மற்றும் தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக விளங்கி கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷின் தந்தையுமாவார்.

தயாரிப்பாளர் சுரேஷ் குமார் அளித்த பேட்டி:

திலீப்புக்கு எதிரான போலீஸ் நடவடிக்கைகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் நடத்தப்படும் தாக்குதல் குறித்து தயாரிப்பாளர் சுரேஷ் குமார் பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பது, கேரளாவில் சிலர் திலீப்பிற்கு கிரிமினல் முத்திரை குத்த முயன்று வருகிறார்கள். நாளைக்கு திலீப்பின் காரை ரிப்பேர் செய்ய மெக்கானிக் இறந்து போனால் கூட அதற்கும் திலீப் தான் காரணம் என்று சொல்வார்கள் போலிருக்கிறது. இப்போது பால சந்திரகுமார் என்பவர் வழக்கின் இறுதி கட்டத்தில் வந்து தலையை கொடுத்து வாயில் வந்ததையெல்லாம் சொல்லி வருகிறார் .

-விளம்பரம்-

திலீப்புக்கு எதிராக இருக்கும் சினிமா உலகம்:

இதைப் பற்றியும் பலரும் நம்பி வருகிறார்கள். நம்பாதவர்களெல்லாம் என்ன முட்டாள்களா? இப்படி எல்லாம் பேசுற என்னையும் போலீஸ் நாளை குறிவைக்கலாம். இதில் ஒருவரை அழிக்கும் செயலை விடவும் வேறு எதையும் பார்க்க முடியவில்லை. தற்போது ஒட்டுமொத்த மலையாள சினிமா உலகமும் மவுனமாக உள்ளது. ரசிகர்கள் அமைப்புகள் எதுவும் பேச முடியாமல் நிலையில் இருக்கிறார்கள். இதற்கெல்லாம் ஒரே காரணம், யார் என்ன செய்தாலும் நம்மையும் சேர்த்து விடுவார்கள் என்ற பயத்தில் இருக்கிறார்கள். ஆனால், எதுக்காக பயப்படனும்? இது ஒரு சுதந்திர நாடு. இந்த நாட்டில் ஒரு குடும்பத்தில் தாயை தவிர மற்ற அனைவரையும் குறிவைத்துத் தாக்குகிறார்கள். இது மிகவும் வித்தியாசமாக உள்ளது. அவர் வீட்டு வழியாக யார் சென்றாலும் அவர் மீது வழக்கு தொடுக்கலாம் என்ற நிலை வந்து விட்டது.

புதிய விஷயங்கள் இந்த வழக்கில் திணிப்பு:

இப்போது புதிய விஷயங்கள் இந்த வழக்கில் திணிக்கப்பட்டு வருகின்றன. வீட்டில் யார் என்ன பேசினாலும் அது முக்கியம் ஆகிவிடுமா? மது கடைக்கு போனால் பலரும் பலவிதமாக பேசுவதைக் கேட்கலாம். வேண்டுமென்றே யாரையாவது ஒரு வழக்கில் சிக்க வைப்பதை தவிர இதில் எதுவும் தெரியவில்லை. இத்தனை மனம் மற்றும் உணர்ச்சி ரீதியான செய்து துரோகங்களை ஒருவர் எவ்வாறு தாங்கிக்கொள்ள முடியும்? வேறு யாருக்காவது இப்படி நடந்திருக்கிறதா? ஏதாவது ஆதாரம் இருக்கிறதா? சரி அவர் குற்றவாளி என்றால் அவரை தண்டிக்கலாம். அதற்கு நீதிமன்றம் இருக்கு. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது புதிய புதிய விஷயங்களை கொண்டு வருவதெல்லாம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

Actor Dileep

திலீப்புக்கு கிடைக்கும் நீதி :

விபத்தில் ஒருவர் உயிரிழக்கிறார் என்றால் அக்கம் பக்கத்தில் உள்ள சிசிடிவி பார்க்க முடியவில்லையாம். இதெல்லாம் யாரோ வேண்டுமென்றே செய்கிறார்கள். இது போன்ற நிகழ்வுகள் வரட்டும். வழக்கு முடியும் வரை ஒவ்வொருவரும் இப்படித்தான் பொய்யான புகார்களை கொடுத்து துன்பப்படுவார்கள். திலீப்பை குற்றவாளி என முத்திரை குத்த வேண்டும் என்ற நோக்கில் சிலர் இதை செய்து வருகின்றனர். அவர்கள் யார்? என்று கண்டுபிடிக்க வேண்டும். இப்போது காவல்துறை செய்வது சரியான செயல் என்று நான் நினைக்கவில்லை. எப்படி இருந்தாலும் ஒரு நீதி கிடைக்கும் என நம்புகிறேன் என்று கூறியிருந்தார்.

Advertisement