அடேங்கப்பா இவ்வளவு பெரிய குடும்பமா – மகன், மகள், பேரன், பேத்தி என்று குடும்பத்தோடு பொங்கல் வாழ்த்து சொன்ன ராதிகா.

0
198
- Advertisement -

ஒட்டுமொத்த குடும்பத்துடன் நடிகை ராதிகா சரத்குமார் கொண்டாட்டிருக்கும் பொங்கல் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 80, 90 கால கட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் ராதிகா . இவர் தமிழில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ் தொடங்கி தற்போது இருக்கும் சூர்யா, விஷால், விஜய், விஜய் சேதுபதி என்று பல்வேறு நடிகர்களுடன் படத்தில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் சினிமாவை தாண்டி சின்னத்திரையில் கலக்கி வருகிறார். அதோடு ராதிகா ராடான் டிவி என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் நூற்றுக்கணக்கான சீரியல்களை தயாரித்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் சன் தொலைக்காட்சியில் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக அண்ணாமலை, வாணி ராணி, செல்வி, அரசி, சித்தி என பல்வேறு தொடர்களில் நடித்து இருந்தார். மேலும், இவர் இயக்கிய சீரியல்கள் எல்லாம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலம்.

- Advertisement -

ராதிகா திரைப்பயணம்:

வெள்ளித்திரையில் சாதித்தவர்களால் சின்னத்திரையிலும் சாதிக்க முடியும் என்று நிரூபித்தவர் நடிகை ராதிகா சரத்குமார். சமீபத்தில் ராதிகாவின் தயாரிப்பு மூலம் விஜய் டிவியில் “கிழக்கு வாசல்” என்ற சீரியல் ஒளிபரப்பாகி இருக்கிறது. இந்த சீரியல் விசுவின் சம்சாரம் அது மின்சாரம் படத்தின் கதை என்று கூறப்படுகிறது.
இந்த சீரியலில் நடிகர் விசு கதாபாத்திரத்தில் நடிகர் விஜய்யின் தந்தை மற்றும் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்ட எஸ்.ஏ சந்திரசேகர் நடிக்கிறார்.

-விளம்பரம்-

ராதிகா நடிக்கும் படம்:

இந்த சீரியல் நன்றாக சென்று கொண்டு இருக்கிறது. பின் கடந்த ஆண்டு இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2ல் ராதிகா நடித்து இருக்கிறார். இதனை அடுத்தும் சில படங்களில் ராதிகா கமிட்டாகி இருக்கிறார். இப்படி இவர் சீரியல், சினிமா, தயாரிப்பு என்று சினிமா துறையில் நுழைந்து கிட்டத்தட்ட 45 ஆண்டுகள் நிறைவு செய்திருக்கிறார். இன்னும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து தான் வருகிறது.

பொங்கல் கொண்டாட்டம்:

இந்நிலையில் ராதிகா குடும்பத்துடன் எடுத்திருக்கும் அழகிய புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியா முழுவதுமே நேற்று பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு இருக்கிறது. பிரபலங்கள் பலரும் தங்கள் குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய புகைப்படங்கள் எல்லாம் பகிர்ந்து இருக்கிறார்கள்.

ராதிகா குடும்ப புகைப்படம்:

அந்த வகையில் நடிகை ராதிகா சரத்குமார் தன்னுடைய கணவர், மகன், மகள், பேரன்,பேத்தி என்று அனைவரிடமும் சேர்ந்து பொங்கல் கொண்டாடி இருக்கிறார். பின் குடும்பத்துடன் சேர்ந்து பல மொழிகளில் பொங்கல் வாழ்த்து சொல்லி இருக்கிறார்கள். மேலும், நடிகை வரலட்சுமி சரத்குமார் இந்த வீடியோவை சோசியல் மீடியாவில் பகிர்ந்து அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து போட்டு இருக்கிறார். இதை பார்த்து பலருமே ராதிகாவிற்கு இவ்வளவு பெரிய குடும்பமா! என்று ஆச்சரியத்தில் லைக்குகளை குவித்து வருகிறார்கள்.

Advertisement