விவகாரத்து சர்ச்சை – முதன் முறையாக மனம் திறந்த ரஷிதாவின் கணவர் தினேஷ். என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

0
1233
rachitha
- Advertisement -

சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் நடிகை ரக்ஷிதா. இவர் கர்நாடகாவை சேர்ந்தவர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற டிவியில் மூலம் தான் தமிழக மக்கள் மத்தியில் அறிமுகம் ஆகி இருந்தார். இதனை தொடர்ந்து இவர் பல சீரியல்களில் நடித்து இருந்தார். அதன் பின் இவர் சின்னத்திரையில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார். மேலும், சீரியலில் கிடைத்த புகழால் ரசிதாவிற்கு சினிமாவில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பும் அமைந்தது. இவர் சினிமாவில் கதாநாயகியாக இரண்டு திரைப்படங்களில் மட்டும் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-
rachitha

பின் சினிமாவில் வரவேற்பு குறைந்தவுடன் இவர் சின்னத்திரை நோக்கி வந்து விட்டார். பின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்து சமீபத்தில் முடிவடைந்த நாம் இருவர் நமக்கு இருவர் 2 என்ற சீரியலில் மகா என்ற கதாபாத்திரத்தில் ரக்ஷிதா நடித்து இருந்தார். ஆனால், இந்த தொடரில் இருந்து இவர் திடீரென்று விலகிவிட்டார். தற்போது இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் ‘இது சொல்ல மறந்த கதை’ என்ற தொடரில் நடித்து வருகிறார். திருமணமாகி கணவர் இல்லாமல் குழந்தைகளுடன் வாழும் பெண்ணின் கதை.

- Advertisement -

ரக்ஷிதா-தினேஷ் பிரிவு:

இந்த சீரியல் ஒளிபரப்பான குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் ரக்ஷிதா தன் கணவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்கிறார் என்று சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது. இது குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இந்நிலையில் தங்களின் பிரிவு குறித்து ரக்ஷிதா கணவன் அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ரக்ஷிதா கணவனின் பெயர் தினேஷ். இவர் வெள்ளித்திரையில் சில படங்களில் நடித்திருந்தாலும் சின்னத்திரையில் ஜீ தமிழில் ஒளிபரப்பான பூச்சூடவா சீரியல் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

rachitha

தினேஷ் கமிட்டாகி இருக்கும் சீரியல்:

அதற்கு முன் இவர் விஜய் டிவி சீரியலில் நடித்து இருந்தார். பின் இவர் தன்னுடைய மனைவி ரக்ஷிதாவுடன் இணைந்து நாச்சியாபுரம் என்ற சீரியலில் நடித்து இருந்தார். நாச்சியாபுரம் சீரியலுக்கு பிறகு இவர்கள் பிரிந்து விட்டார்கள். தினேஷ் மீண்டும் சீரியலில் ரீ என்ட்ரி கொடுக்க உள்ள தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள புதிய சீரியல் ஒன்றில் தினேஷ் கமிட்டாகியிருக்கிறார். இப்படி ஒரு சூழலில் நடந்து முடிந்த சின்னத்திரை நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டு இணை செயலாளராக தினேஷ் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். சிவன் சீனிவாசன், போஸ் வெங்கட் அணியினர் வென்ற தேர்தலில் எதிர் அணியில் இருந்து தினேஷ் வெற்றி பெற்றிருக்கிறார்.

-விளம்பரம்-

தினேஷ் அளித்த பேட்டி:

இந்த நிலையில் தேர்தல் வெற்றி தொடர்பாக பிரபல சேனல் தினேஷ்க்கு வாழ்த்து சொல்லி அவரிடம் ரக்ஷிதா குறித்து கேள்வி எழுப்பி இருந்தது. அதற்கு அவர் கூறியிருந்தது, வீட்டுக்கு வீடு வாசப்படி என்று சொல்வார்கள் அதே தான். எங்களுடைய வாழ்க்கையிலும் சமீப காலமாக அசாதாரண நாட்களாக நகர்ந்து கொண்டிருக்கிறது. எப்படியோ இந்த நாட்களை கடந்து போயிருக்கிறேன். என்னைவிட தைரியசாலி அவர்கள். அதனால் அவர்களுக்கும் இந்த சூழ்நிலையை எப்படிக் கையாள்வது என்று தெரியும். இடையில் சமூக ஊடகங்கள் பரபரப்புக்காக தினம் தினம் புதுப்புது செய்திகளை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், நான் அதைப் புறந்தள்ளி விடுகிறேன். வெறும் வாய்க்கு அவல் கிடைத்த மாதிரி தான். என்னென்னவோ செய்தியை பரப்பி லைக்ஸ்க்காக செய்கிறார்கள்.

rachitha

ரக்ஷிதா குறித்து தினேஷ் சொன்னது:

அவர்களைப் பற்றி நாம் என்ன சொல்ல முடியும்? பண்ணிட்டு போகட்டும். கணவன், மனைவி இடையிலான சண்டை நடந்தால் ஒரு சிலர் ஒரே வீட்டில் இருந்துகொண்டே ஒருத்தருக்கு ஒருத்தர் பேசாமல் இருப்பார்கள். சிலர் கொஞ்சநாள் தனித்தனியாக இருப்போம் என்று முடிவெடுப்பார்கள். என்னை பொறுத்தவரைக்கும் எங்கள் இடையிலான பிரிவு தற்காலிகமானதுதான். மற்றபடி நான், ரக்ஷிதா இருவரும் ஒரு சட்ட பூர்வமாக பிரிவதற்கான எந்த ஒரு முயற்சியையும் இந்த நிமிஷம் வரைக்கும் எடுக்கவில்லை. இதை நான் இந்த இடத்தில் சொல்ல விரும்புகிறேன். எல்லா பாரத்தையும் காலத்தின் மீது போட்டு விட்டு பேசாமல் இருக்க வேண்டியது தான் காலம் எந்த ஒரு கடுமையான சூழலையும் மாற்றிவிடும் என்று கூறியிருந்தார்.

Advertisement