இந்த முறை ஐஸ்வர்யா வெளியேறுவது உறுதி.! அடித்து சொல்லும் பிரபல சீரியல் நடிகை..!

0
1353
Aishwarya
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் மும்தாஜ் வெளியேற்றபட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. மும்தாஜ் வெளியேற்றபட்டபோது நாமினேஷனில் ஐஸ்வர்யாவும் இருந்ததால் கண்டிப்பாக ஐஸ்வர்யா தான் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவார் என்று பலரும் எதிர்பார்த்தனர்.

-விளம்பரம்-

Rachitha saravanan

- Advertisement -

ஐஸ்வர்யாவிற்கு பதிலாக மும்தாஜ் வெளியேற்றபடத்தை பலரும் விமர்சித்து வரும் நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான “சரவணன் மீனாட்சி” தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த சீரியல் நடிகை ரஷிதா, மும்தாஜ் வெளியேற்றம் குறித்தும் ஐஸ்வர்யா எலிமினேஷன் ஆகாமல் இருப்பதை குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார்.

சமீத்தில் தொலைபேசி வாயிலாக பேட்டி கொடுத்த ரஷிதாவிடம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மும்தாஜ் குறித்து கேட்கப்பட்டுள்ள போது, அவங்க (மும்தாஜ்) உள்ள இருக்கிற வரைக்கும் அவங்க மீது இத்தனை பேர் அன்பு வைத்திருக்கிறார்கள் என்று அவருக்கு தெரியாது. அவங்க வெளியே வந்தும், கடவுளே அவங்க வெளியே வந்துட்டாங்கனு முதல் ஆளா நான் தான் சந்தோஷப்பட்டேன்.

-விளம்பரம்-

Aishwarya-dutta

உண்மையில் மும்தாஜ் வெளியே வருவாங்கனு யாரும் நினைக்கல, ஆனால், அவர் வெளியே வந்ததும் பிக் பாஸ் வீட்டில் நடந்த டாஸ்க் அனைத்தும் மிகவும் கொடூரமாக இருந்தது. மும்தாஜ் இருந்திருந்தால் கண்டிப்பாக அந்த டாஸ்குகளை செய்திருக்கமாட்டார். ராணி எப்போதும் ராணி மாதிரி தான் இருக்க வேண்டும் அதனால் அவங்க வெளியே வந்ததே சரி என்று தான் எனக்கு தோன்றியது என்று பேசியுள்ளார் நடிகை ரஷிதா.

மேலும்,ஐஸ்வர்யா குறித்து கேட்கபட்ட போது, ஐஸ்வர்யா எப்போது, எப்படி மாறுவார் என்பது எல்லாருக்கும் தெரியும், ஒரு இடத்தில் அழுது சாதிக்க வேண்டும் என்றால் அங்கே அழுது சாதிப்பார். அதே போல ஒரு இடத்தில் அமைதியாக இருக்க வேண்டும் என்றால் அங்கே அமைதியாக நின்று காரியத்தை சாதிப்பார், அது தான் அவருடைய குணம்.அவர் எங்கு, எப்படி நடக்க வேண்டும் என்பதை விறல் நுனியில் வைத்துள்ளார். என்னை பொறுத்தவரை கண்டிப்பாக இந்த வாரம் ஐஸ்வர்யாதான் வெளியே வரவேண்டும் என்று கூறியுள்ளார்.

Advertisement