சின்மயி டப்பிங் யூனியனுக்கு வந்தால் – பல ஆண்டுகள் கழித்து சின்மயிக்கு பதிலடி கொடுத்த ராதாரவி

0
448
Chinmayi
- Advertisement -

பாடகி சின்மயியை டப்பிங் யூனியன் சங்கம் காம்பவுண்டுகுள் கூட விடமாட்டோம் என்று நடிகர் ராதாரவி அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. டப்பிங் யூனியனுக்கு நீண்ட காலமாக தலைவராக இருந்தவர் ராதாரவி. இதனால் இந்த மாதம் 17 ஆம் தேதி டப்பிங் யூனியனுக்கு தலைவர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் ராதாரவியும், டப்பிங் யூனியன் பொறுப்புகளில் இருப்பவரும், சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்தவருமான ராஜேந்திரனும் போட்டியிடுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

ராஜேந்திரனுக்கு யூனியன் உறுப்பினர்கள் மத்தியில் நிறைய செல்வாக்கு இருப்பதால் அவர் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனை அடுத்து சமீபத்தில் ராஜேந்திரன் பேட்டி அளித்திருந்தார். அதில் அவர், நான் அண்ணன் ராதாரவியை எதிர்த்து போட்டியிடவில்லை. அவர் தலைவர் பதவிக்கு போட்டியிடாததை பயன்படுத்தி பொறுப்பில்லாத சில பேர் இந்த பதவிக்கு வர முயற்சி செய்தார்கள். இதனால் நான் தலைவர் பதவியில் போட்டியிட தயாரானேன். ஆனால், அந்த சிலருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன்.

- Advertisement -

மேலும், சின்மயி ஒரு சாதாரண உறுப்பினராக தான் சேர்ந்தார். சந்தா புதுப்பிக்க சொன்னபோது, நான் லைஃப் மெம்பர், சந்தா புதுப்பிக்க தேவையில்லை என்று சொன்னார். அவர் சந்தா செலுத்தாததால் உறுப்பினர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது. இதனால் இந்த விவகாரம் கோர்ட் வரைக்கும் போனது. நீதிமன்றமும் சங்க நடவடிக்கை சரி என்று தீர்ப்பும் தந்தது. ஆனால், சின்மயி சொன்ன ஒரு பொய்யால் யூனியன் நடத்திய இந்த வழக்கில் சில லட்சங்கள் செலவானது தான் மிச்சம். அதோடு அவர் சங்கத்தில் உறுப்பினராக இல்லை. ஆனால், அவரை டப்பிங் யூனியனில் லோகேஷ் கனகராஜ் பயன்படுத்தியது தவறு என்றெல்லாம் பேசி இருந்தார்.

ராதாரவி பேட்டி:

இப்படி ராஜேந்திரன் பேசியிருந்தது சோசியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் சர்ச்சையாகி இருந்தது. இதை அடுத்து லியோ படத்தில் சின்மயி குரல் பயன்படுத்தியதற்கு லோகேஷ், டப்பிங் யூனியனுக்கு 50000 செலுத்தி இருந்தார். தற்போது யூனியன் விவகாரம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நடிகர் ராதாரவி அவர்கள் சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்து, நான் என்னுடைய வாழ்க்கையில் எதிரிகளை பார்த்திருக்கிறேன். ஆனால், துரோகிகளை இப்போது தான் பார்க்கிறேன். கண்டிப்பாக எங்களுடைய அணி மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என்று நம்பிக்கை இருக்கிறது.

-விளம்பரம்-

தேர்தல் குறித்து சொன்னது:

நான் வெற்றி பெற்றால் இதிலிருந்து ஆறு பேரை எடுத்து விடுவேன். கண்டிப்பாக நான் உழைக்கக் கூடியவர்களை வைத்து தான் இதை செய்ய வேண்டும். தேர்தல் முடிந்ததுமே யாருக்கு என்ன எல்லாம் வேண்டுமோ அதை எல்லாம் செய்வோம். அதேபோல் லியோ படத்திற்கு சின்மயி குரல் கொடுத்த விவகாரம் அனைவரும் அறிந்ததே. என்னுடைய கோரிக்கையை ஏற்று தான் லோகேஷ் கனகராஜ் அபராதம் செலுத்தினார். லோகேஷ் கனகராஜ் தான் அபராதம் கொடுக்க வேண்டும் என்பதில்லை. அவருக்கு விதிமுறைகள் தெரியாது.

சின்மயி குறித்து சொன்னது:

நான் போன் பண்ணி சொன்னதுமே அவர் ஒற்றுக் கொண்டார். யூனியனுக்கு வந்து பணமும் கொடுத்தார். அதேபோல சின்மயி மீண்டும் டப்பிங் யூனியனுக்கு வந்தால் நிச்சயமாக அந்த காம்பவுண்டுகள் கூட சேர்க்க மாட்டோம். அவருக்கு இந்த டப்பிங் யூனியனில் வர தகுதியே இல்லை என்று கூறியிருக்கிறார். தற்போது ராதாரவி பேசி இருக்கும் வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் ராதாரவி. இவர் பெரும்பாலும் படங்களில் வில்லன், குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அதேபோல் இவர் அரசியலிலும் தீவிரம் காட்டி வருகிறார்.

Advertisement