இரண்டாம் உலக போரை மையமாக வைத்து எடுக்க போகும் அந்த படத்தில், இரண்டாம் உலகப்போரின் போது பிரிட்டிஷ் நாட்டை தனது கையில் வைத்துக் கொண்டிருந்த வின்ஸ்டண் சர்ச்சிலின் இரணுவ படையில் ரகசிய உளவாளியாக இருந்த நூர் இனாயத் காண் என்ற உளவாளியின் கதா பாத்திரத்தில் நடிக்க போகிறார் ராதிகா அப்டே.
காஸ்டல் என்ற ஹாலிவுட் படத்தின் மூலம் பிரபல மான ஸ்தனா காட்டிக்,சாரா மெஹன் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்கள்.ஏற்கனவே பாலிவுட்டில் இருந்து நடிகைகள் பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் போன்றவர்கள் ஹாலிவுட்ற்கு சென்று கலக்கி இருக்கின்றனர். இந்நிலையில் தற்போது ராதிகா அப்டேவும் ஹாலிவுட்டில் இடம் பிடித்திருப்பது இந்திய சினிமாவிற்கு பெருமை தான்.




