லாரன்ஸை ஹீரோவாக்கிய இயக்குனர் சாலை விபத்தில் மரணம் – அவரது பெயரை தான் படத்துக்கே வச்சி இருக்காரே.

0
185
- Advertisement -

ராகவா லாரன்ஸ் பட இயக்குனர் விபத்தில் சிக்கி இறந்திருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் ராகவா லாரன்ஸ். இவர் நடனத்தின் மூலம் தான் சினிமா துறைக்குள் நுழைந்தார். பின் இவர் சினிமாவில் பிரபலமான நடன இயக்குனர் ஆனார். தற்போது இவர் நடிகர், நடன இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்ந்து வருகிறார்.

-விளம்பரம்-

கடைசியாக ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியாகி இருந்த படம் சந்திரமுகி 2. இந்த படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் பி. வாசு தான் இரண்டாம் பாகத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் இவருடன் ராதிகா, மகிமா,கங்கனா, லட்சுமி மேனன், வடிவேலு உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்தது . இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

- Advertisement -

ஜிகர்தண்டா படம்:

இதனை அடுத்து தற்போது ராகவா லாரன்ஸ் அவர்கள் ஜிகர்தண்டா 2 படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருக்கிறார். இந்த இரண்டாம் பாகத்தில் எஸ் ஜே சூர்யா, ஷைன் டாம் சாக்கோ, நிமிஷா சஜயன் நடித்திருக்கிறார்கள். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த படம் வெளிவர இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி ராகவா லாரன்ஸ் சினிமா உலகில் உச்சத்தில் இருப்பதற்கு காரணம் இயக்குனர் அற்புதன் தான். ராகவா லாரன்ஸ் ஆரம்ப காலத்தில் நடன இயக்குனராக இருந்த போது நடிக்க வாய்ப்பு தேடி அலைந்து இருந்தார்.

பலரும் இவரை ரிஜெக்ட் செய்து விட்டார்கள். ஆனால், இவருடைய நடிப்பு திறனை புரிந்து வாய்ப்பு கொடுத்தவர் இயக்குனர் அற்புதன். கடந்த 2002 ஆம் ஆண்டு வெளிவந்த அற்புதம் படத்தில் ஹீரோவாக லாரன்ஸ் நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குனர் அற்புதன் தான் இயக்கியிருந்தார். இந்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. மேலும், இந்த படத்தில் இரண்டாவது ஹீரோவாக குணால் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

-விளம்பரம்-

அற்புதன் குறித்த தகவல்:

இதனை அடுத்து இயக்குனர் அற்புதன் அவர்கள் பரத் நடிப்பில் வெளிவந்த மனதோடு மழை காலம், செய்யவே சிறுகாளி போன்ற சில படங்களை இயக்கியிருந்தார். அதற்குப்பின் இவர் படங்களை இயக்குவதை விட்டுவிட்டார். இந்த நிலையில் இயக்குனர் அற்புதன் இறந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது, சமீபத்தில் அற்புதன் சாலை விபத்தில் விபத்தொன்றில் சிக்கிருந்தார்.

அற்புதன் இறப்பு;

அதில் இவருக்கு படுகாயம் ஏற்பட்டிருந்தது. பின் தனியார் மருத்துவமனையில் இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு இருந்தார்கள். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி இயக்குனர் அற்புதன் இறந்திருக்கிறார். இவருடைய இறப்பு பலருக்குமே பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இவருடைய திடீர் மரணம் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இவருடைய இறப்பிற்கு பலரும் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement