ஆணவத்துல அப்படி சொல்லல – தனது ட்ரஸ்ட்டிற்க்கு பணம் அனுப்ப வேண்டாம் என்று சொன்னதற்காண காரணத்தை சொன்ன லாரன்ஸ்

0
729
Raghava Lawrence
- Advertisement -

யாரும் பணம் கொடுக்க வேண்டாம் என்று ராகவா லாரன்ஸ் வெளியிட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் ராகவா லாரன்ஸ். இவர் நடனத்தின் மூலம் தான் சினிமா துறைக்குள் நுழைந்தார். பின் இவர் சினிமாவில் பிரபலமான நடன இயக்குனர் ஆனார். தற்போது இவர் நடிகர், நடன இயக்குனர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகம் கொண்டு திகழ்ந்து வருகிறார்.

-விளம்பரம்-

கடைசியாக நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த படம் ருத்ரன். ஆக்‌ஷன் என்டர்டெயினராக இந்த படம் வெளியாகி இருந்தது.இந்தப் படத்தில் ப்ரியா பவானி சங்கர், பூர்ணிமா நடித்து இருந்தார்கள். இந்த பதம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. அதன் பின் ராகவா லாரன்ஸ் அவர்கள் ‘துர்கா’ என்ற பேய் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் போஸ்டர்கள் எல்லாம் கடந்த ஆண்டே வெளியாகி இருந்தது. இந்த போஸ்டரை சிலர் விமர்சித்து இருந்தாலும் சிலர் நல்ல விதமாக கமெண்டுகளை போட்டு இருந்தார்கள்.

- Advertisement -

ராகவா லாரன்ஸ் திரைப்பயணம்:

ராகவா லாரன்சின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ ராகவேந்திர புரொடக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. இதனை தொடர்ந்து இவர் 18 வருடங்கள் கழித்து உருவாகும் சந்திரமுகி 2 படத்தில் நடித்து வருகிறார். மேலும், இந்த படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் பி. வாசு தான் இந்த இரண்டாம் பாகத்தை இயக்குகிறார். இந்த படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் சார்பில் சுபாஷ் சந்திரன் அவர்கள் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு கீரவாணி இசையமைக்கிறார். முதல் பாகத்தை போல இந்த படத்திலும் நடிகர் வடிவேலு நடிக்கிறார்.

சந்திரமுகி 2 படம்:

இதில் ராகவா லாரான்ஸ் வேட்டையன் ரோலில் நடிக்கிறார். இவர்களுடன் படத்தில் கங்கனா ரனாவத், ராதிகா உட்பட பலர் நடிக்கின்றனர். இந்த படம் அடுத்த மாதம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. அடுத்ததாக கொடி புகழ் துரை செந்தில் குமார் இயக்கும் படத்திலும் லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படி ராகவா லாரன்ஸ் பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் பல சமூக சேவைகளை செய்து கொண்டு இருக்கிறார். சினிமாவையும் தாண்டி தொண்டு நிறுவனத்தின் மூலம் லாரன்ஸ் அவர்கள் பல்வேறு ஆதரவற்றோர்களுக்கு உதவி கரம் நீட்டி வருகிறார். இதனால் இவருக்கு ஒன்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

-விளம்பரம்-

ராகவா லாரன்ஸ் வெளியிட்ட வீடியோ:

சமீபத்தில் கூட இனி யாரும் என் அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்க வேண்டாம் என்று ராகவா லாரன்ஸ் அறிக்கை ஒன்று வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் இது குறித்து லாரன்ஸ் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். அதில் அவர், சமீபத்தில் நான் என்னுடைய அறக்கட்டளைக்கு யாரும் பணம் கொடுக்க வேண்டாம் என்று கூறியிருந்தேன். ஆரம்பத்தில் நான் டான்ஸ் மாஸ்டராக இருந்தபோது அறக்கட்டளைய ஆரம்பித்தேன். 60 குழந்தைகளை கொண்டுதான் என்னுடைய வீட்டில் வளர்த்தேன். அதுமட்டுமில்லாமல் மாற்றுத்திறனாளிக்கு டான்ஸ் சொல்லி கொடுத்தும் வந்தேன். அப்போது என்னிடம் பண வசதி இல்லை. அதனால் மற்றவரிடம் உதவி கேட்டிருந்தேன்.

ட்ரஸ்ட் குறித்து சொன்னது:

இப்போ நான் ஹீரோவாகி விட்டேன். ஆரம்பத்தில் நான் இரண்டு வருடத்திற்கு ஒரு படங்கள் தான் நடித்தேன். ஆனால், தற்போது ஒரு வருடத்திற்கு மூன்று படங்கள் நடிக்கிறேன். நன்றாகவே சம்பாதிக்கிறேன். எதற்கு மற்றவர்களிடம் உதவி கேட்கணும் என்று எனக்குள்ளே ஒரு கேள்வி இருந்தது. இதை நான் ஆணவமாக பணத்தை வேண்டாம் என்று சொல்லவில்லை. எனக்கு கொடுக்கும் பணத்தை உங்கள் வீட்டு பக்கத்தில் இருந்து கஷ்டப்படும் அறக்கட்டளைக்கு கொடுங்கள். இல்லை உங்களுடன் சேர்ந்து தான் சமூக சேவை செய்வேன் என்று நினைத்தால் எனக்கு தெரிந்த நிறைய இடங்களில் கஷ்டப்படுபவர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் நேரடியாகவே உங்களை அழைத்துக் கொண்டு செல்கிறேன். உங்கள் கையால் நீங்கள் செய்யுங்கள். அதில் கிடைக்கும் சந்தோஷமே வேறு என்று கூறியிருக்கிறார்.

Advertisement