இல்லண்ணா பணம் வேண்டாம், உங்க அன்பு போதும் – நேரில் சென்று லாரன்ஸ் செய்த் உதவியை அன்போடு மறுத்து ஓவியர் செல்வம்

0
450
- Advertisement -

நடிகர் ராகவா லாரன்ஸ், ஓவிய ஆசிரியரை நேரில் சந்தித்து பாராட்டிய விஷயம் தான் தற்போது வைரலாக்கப்பட்டு வருகிறது. தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ரகுவாரா லாரன்ஸ். இவர் நடனத்தின் மூலம் தான் சினிமா துறைக்குள் நுழைந்தார். பின் இவர் மிகப் பிரபலமான நடன இயக்குனர் ஆனார். அதற்குப் பிறகு ராகவா லாரன்ஸ் நடிகராக கலக்கி கொண்டு வருகிறார். அது மட்டும் இல்லாமல் நடிகர் ராகவா லாரன்ஸ் ‘மாற்றம்’ என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை தொடங்கியுள்ளார்.

-விளம்பரம்-

இந்த அறக்கட்டளை மூலம், உதவி தேவைப்படும் மக்களுக்கு உதவி செய்து வருகிறார். மேலும் ஏழை, எளிய மாணவ மாணவிகள் படிப்பிற்கு உதவி செய்வதோடு, கொடிய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மருத்துவ உதவிகள் செய்து வருகிறார். இவரால் பயனடைந்தவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர் என்று கூறலாம். மேலும், அவரால் படித்து ஆளாக்கப்பட்ட மாணவர்கள் தற்போது நல்ல நிலைமைக்கு உயர்ந்துள்ளனர். அவர்களும் ராகவா லாரன்ஸ் போல் ஏழை எளியோருக்கு உதவி செய்ய தயாராக இருக்கிறார்கள்.

- Advertisement -

ராகவா லாரன்ஸின் ‘மாற்றம்’ :

எனவே அவர்களையும் தன்னுடன் இனைத்துக் கொண்டு ‘மாற்றம்’ என்ற பெயரில் கடந்த மே ஒன்றாம் தேதி முதல் சேவை அமைப்பு தொடங்கியுள்ளார். அதன் மூலம் ராகவா லாரன்ஸ் பல்வேறு நல திட்ட உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில் தான் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த ஓவிய ஆசிரியர் ஒருவரை லாரன்ஸ் நேரில் சந்தித்து பாராட்டி இருக்கிறார். அதாவது அந்த ஓவியா ஆசிரியரின் திறமையை சமூக வலைத்தளங்கள் மூலம் கண்டு ரசித்த லாரன்ஸ் அவரது திறமையை பாராட்ட விரும்பியதாக தெரிகிறது.

ஓவியரை நேரில் சந்தித்த லாரன்ஸ்:

மேலும், ராகவா லாரன்ஸை சந்தித்த அந்த ஓவிய ஆசிரியர் ஒரு ஓவியத்தையும் பரிசாக அவருக்கு அளித்துள்ளார். அந்த ஓவியத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், ராகவா லாரன்ஸுக்கு முத்தம் கொடுப்பது போல் இருந்தது. அந்த ஓவியத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட லாரன்ஸ் பதிலுக்கு அந்த ஓவிய ஆசிரியருக்கு நிதிய உதவியும் வழங்கியுள்ளார். அப்போது லாரன்ஸிடம் பணமெல்லாம் வேண்டாம் அண்ணா, உங்கள் அன்பு மட்டும் போதும் என்று ஓவிய ஆசிரியர் கூறியுள்ளார்.

-விளம்பரம்-

ஓவியரிடம் லாரன்ஸ் வேண்டுகோள்:

அதற்கு ராகவா லாரன்ஸ், நீங்கள் கல்யாணம் கூட பண்ணிக்காம அப்பா அம்மாவை பார்த்துக் கொள்றீங்க, அதனால் உங்களுக்கு இந்த பணம் தேவைப்படும் வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். மேலும் உங்களால் முடிந்தால் உங்கள் ஓவியத் திறமையை, ஏழை எளிய மாணவர்களுக்கு கற்றுக் கொடுங்கள் என்றும், நாம் அனைவரும் சேர்ந்து மாற்றத்தை கொண்டு வருவோம் என்றும் கூறியுள்ளார். இதுக்கு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ராகவா லாரன்ஸ் பதிவிட்டுள்ளார்.

லாரன்ஸின் பதிவு:

அதில், வணக்கம் நண்பர்களே, ரசிகர்களே, அவர் பெயர் செல்வம். அவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர் பேட்டையைச் சேர்ந்த ஓவிய ஆசிரியர். அவருடைய அற்புதமான ஓவிய திறமையை உங்கள் அனைவராலும் சமூக ஊடகங்கள் மூலம் அறிந்து கொண்டேன். அவரை நேரில் சந்தித்து பாராட்ட விரும்பினேன். இன்று நான் அவரை நேரில் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் அவருடைய பரிசு என்னை மிகவும் கவர்ந்தது என்று பதிவிட்டுள்ளார். தற்போது ராகவா லாரன்ஸ் ‘அதிகாரம்’ மற்றும் ‘துர்கா’ என்னும் படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement