ஏன் நீக்கிடீங்கனு போன் பண்ணி கேட்டா இப்படி சொல்றாங்க – ராஜா ராணி 2வில் இருந்து விலகப்பட்ட காரணம் குறித்து மனம் நொந்த ரியா.

0
797
riya
- Advertisement -

ராஜா ராணி சீரியலில் கதாநாயகியாக நடித்த ரியா விலகிய நிலையில், தான் விலகிய காரணம் குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார். விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல் என்றால் அது ராஜா ராணி சீரியல் தான். இந்த சீரியல் ஏற்க்கனவே முதல் பாகம் வெற்றிகரமாக முடிவடைந்து தற்போது இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் தொடர்ந்து விறுவிறுப்பாக செல்வத்தினால் டிஆர்பியிலும் முன்னிலை வகித்து வருகிறது.

-விளம்பரம்-

ராஜா ராணி சிரியலில் ஐபிஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற நோக்கத்துடன் இருக்கும் பெண் ஒருவர் இனிப்பு கடை நடத்தி வரும் ஒருவரை திருமணம் செய்து கொள்கிறார். இப்படி இருக்கையில் ஒரு கட்டத்தில் தன்னுடைய மனைவி ஐபிஎஸ் அதிகாரியாக வரவேண்டும் என்ற ஆசையை கதாநாயகன் தெரிந்து கொள்கிறார். ஆனால் இந்த ஆசைக்கு எதிராக கதாநாயகனின் அம்மா இருந்து வருகிறார்.இந்நிலையில் இவரை மீறி தன்னுடைய கனவை கதாநாயகி நிறைவேற்றினாரா என்பதுதான் மீதி கதையாக இருக்கிறது.

- Advertisement -

ராஜா ராணி கதாநாயகிகள் மாற்றம் :

சுவாரசியமாக சென்று கொண்டிருந்த ராஜா ராணி சீரியலில் தொடக்கத்தில் சந்தியாவாக நடிகை ஆலியா மானசா நடித்து வந்தார். ஆனால் ஆலியா மானசா கர்ப்பமாக இருத்தினால் விலகிய நிலையில் நடிகை ரியா புதிய சந்தியாவாக நடித்து வந்தார். ஆனால் ஆலியா மனசாவுக்கு குழந்தை பிறந்த நிலையில் ராஜா ராணி சீரியலுக்கு மீண்டும் வந்தால் ரியா என்ன செய்வார் என்ற வேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து வந்தது. இந்நிலையில் ரியா சீரியலில் இருந்த எந்த காரணமும் சொல்லாமல் விலகியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

ரியா விலகல் :

ராஜா ராணி சீரியல் நடிகை ரியா மாறியது குறித்து பலவிதமான கருத்துகள் வந்தாலும் அவராகத்தான் சீரியலை விட்டு வெளியேறினார் என்று ஒரு தரப்பு கூறுகிறது. ஆனால் சிலர் ரியா வெளியூரில் இருந்துள்ளார். அவரை படப்பிடிப்புக்கு அழைத்துள்ளனர் சீரியல் குழுவினர். ஆனால் ரியா வர மறுத்துள்ளார். இதனால் தான் ரியாவை ராஜா ராணி சிரியலில் இருந்து நீக்கியுள்ளனர் என்று பலவிதமான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

-விளம்பரம்-

விலகவில்லை நீக்கி விட்டனர் :

இப்படிப்பட்ட நிலையில் தான் பிரபல செய்தி ஊடகம் ஓன்று சீரியல் நடிகை ரியாவிடம் ராஜ ராணி சீரியலில் இருந்து விலகியது குறித்து கேட்டது. அதற்கு பதிலளித்த ரியா “சிரியலில் கதாநாயனாகியின் மற்றம் குறித்து என்னிடம் எதுவும் கூறவில்லை. எனக்கு தெரியாமல் தான் இந்த விஷயம் நடந்திருக்கிறது. எனக்கு ஒவ்வொரு மாதமும் 15 முதல் 30 வரையில் தான் படப்பிடிப்பு. அந்த நாட்களை தவிர்த்து மற்ற நாட்களில் நான் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பார்த்து வருகிறேன்.

அவர்கள் சொன்ன காரணம் :

இந்நிலையில் தான் நான் ஒரு மாதத்திற்கு முன்னரே நான் வெளியூர் செல்கிறேன் என்று படப்பிடிப்பு குழுவிடம் சொல்லியிருந்தேன் அவர்களும் சரி என கூறினார்கள். ஆனால் அதற்கு பிறகு திடீரென கதாநாயகியை மாற்றி விட்டனர். நான் ராஜா ராணி படக்குழுவிடம் கேட்டதற்கு “கம்யூனிகேஷன்” சரியில்லை என்று கூறினார்கள். அது ஏன் என்று புரியவில்லை. அது எனக்கு வருத்தமாகவும், வெறுப்பாகவும் இருந்தது. அதனால் தான் அந்த விஷியம் குறித்து பெரிதாக வெளியில் சொல்லவில்லை எனக் கூறினார்.

Advertisement