-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

இந்த ட்ரெஸ் தேவையா? – ராஜா ராணி அர்ச்சனாவை படு மோசமாக விமர்சிக்கும் நெட்டிசன்கள் – காரணம் இந்த போட்டோ ஷூட் தான்.

0
846
archana

ராஜா ராணி 2 சீரியல் நடிகை அர்ச்சனா நடத்திய போட்டோ ஷூட் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் மோசமான கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை சீரியல்கள் விளங்குகிறது. அதிலும் விஜய் டிவி சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்று கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்று தான் ராஜா ராணி 2. கடந்த 2019 ஆம் ஆண்டு முடிவடைந்த ராஜா ராணி சீரியல் இளைஞர்கள் முதல் பல குடும்பங்கள் வரை என எல்லோர் மனதில் பெரும் வரவேற்பை பெற்றது.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து ராஜா ராணி 2 என்ற சீரியல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த சீரியல் முழுக்க முழுக்க கூட்டு குடும்ப கதையை மையமாக கொண்டது. தற்போது இந்த சீரியல் டிஆர்பியில் முதல் இடத்தில் உள்ளது. ஐபிஸ் ஆக வேண்டும் என்ற லட்சியத்தை நனவாக்க போராடும் ஒரு பெண்ணின் கதை. இந்த தொடர் ஹிந்தி சீரியல் Diya Aur Baati Hum ரீமேக் ஆகும். மேலும், தமிழில் இந்த சீரியலை இயக்குனர் பிரவீன் பெண்ணெட் இயக்கி வருகிறார். முதல் சீசனை தொடர்ந்து இரண்டாவது சீசனையும் இவரே எடுத்து வருகிறார்.

ராஜா ராணி 2 சீரியல்:

இந்த தொடரில் சரவணன் என்ற கதாபாத்திரத்தில் சித்து நடிக்கிறார். சந்தியா என்ற கதாபாத்திரத்தில் ஆலியா நடித்தார். சந்தியாவை எப்படியாவது போலீஸ் அதிகாரியாக ஆக்க வேண்டும் என்று சரவணன் போராடி வருகிறார். இந்த சுழலில் ஆல்யா இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்தார். இருந்தாலும் இவர் தொடர்ந்து நடித்து வந்தார். ஆனால், ஆல்யா குழந்தை பிறக்க இருக்கும் நிலையில் சீரியலில் இருந்து விலகிவிட்டார். தற்போது ஆல்யா மானஸாவிற்கு பதிலாக ரியா என்பவர் புதிய சந்தியாவாக நடித்து வருகிறார்.

ராஜா ராணி 2 வில்லி அர்ச்சனா:

-விளம்பரம்-

மேலும், இந்த தொடரில் நாயகி சந்தியாவுக்கு இணையாக மக்கள் மத்தியில் படு பேமஸாக இருப்பது வில்லியாக நடிக்கும் அர்ச்சனா கதாபாத்திரம் தான். தான் நினைத்தது நடக்க வேண்டும் என்றால் எந்த எல்லைக்கும் செல்லக் கூடியவர் அர்ச்சனா. இவர் தொகுப்பாளினியாக தான் தன்னுடைய கேரியரை தொடங்கினார். இதை அடுத்து விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சியில் அர்ச்சனா பங்கேற்று இருந்தார். பிறகு இன்ஸ்டாகிராம், டிக் டாக் போன்ற சோசியல் மீடியாவில் இவருடைய வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதன் மூலம் தான் இவருக்கு விஜய் டிவி வாய்ப்பு கிடைத்தது.

-விளம்பரம்-

அர்ச்சனா நடத்திய போட்டோஷுட்:

இந்த தொடரின் மூலம் அர்ச்சனா மக்கள் மத்தியில் பிரபலமானார். ஆனால், இவரை திட்டி தீர்க்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு சீரியலில் இவர் வில்லியாக மிரட்டி வருகிறார். இந்த நிலையில் தற்போது அர்ச்சனாவின் புகைப்படத்தை பார்த்து சோசியல் மீடியாவில் பயங்கர விமர்சனங்களை பதிவிட்டு வருகிறார்கள். அது என்னவென்றால், நடிகை அர்ச்சனா அவர்கள் எப்போதும் சோசியல் மீடியாவில் பிசியாக இருப்பார். இவர் அடிக்கடி தான் எடுக்கும் போட்டோஷுட் புகைப்படம், வீடியோக்களை எல்லாம் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருவார்.

அர்ச்சனாவை திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்:

இதனால் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது அர்ச்சனா அவர்கள் கருப்பு நிற உடையில் போட்டோஷூட் ஒன்று நடத்தியுள்ளார். அதில் அவர் கொஞ்சம் அரைகுறை ஆடையில் போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறார். அதற்கான புகைப்படமும், வீடியோவும் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. இதைப் பார்த்து தான் பலரும் ‘இது தேவையா? தூ…’ என்று பயங்கரமாக அர்ச்சனாவை விமர்சித்து கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news