கணவராக இருந்தாலும் ஒரு நாயம் வேண்டாமா? நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராஜா ராணி சீரியல் நடிகை

0
1706
niharika
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் சமீப காலமாகவே சினிமா டைட்டல்களை மையமாக கொண்டு பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. கடைக்குட்டி சிங்கம் ஈரமான ரோஜாவே, நாம் இருவர் நமக்கிருவர் என்று சினிமா தலைப்புகளை வைத்து பல்வேறு சீரியல்கள் வந்தது. அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான ராஜா ராணி தொடர் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த சீரியலில் கார்த்தி மற்றும் செம்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா ஜோடிகள் நிஜ வாழ்விலும் காதலித்து வந்து பின்னர் திருமணம் செய்து கொண்டார்கள்.

-விளம்பரம்-

திருமணத்திற்கு பின்னர் சஞ்சீவ் சமீபத்தில் தான் ஆல்யாவிற்கு பெண் குழந்தை பிறந்தது. திருமணத்திற்கு சஞ்சீவ் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் காற்றின் மொழி என்ற தொடரில் நடித்துவருகிறார். ராஜா ராணி தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இந்த தொடரின் இரண்டாம் பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் சஞ்சீவிற்கு பதில் ‘திருமணம்’ சீரியல் நடிகர் சித்து நடிக்கிறார்.

- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பானது ‘என் கணவர் என் தோழன்’ என்ற தொடரின் ரீ மேட் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல ‘என் கணவர் என் தோழன்’ தொடரே இந்தியில் வெற்றியடைந்த ”தியா ஓர் பாதீ ஹம்’  என்ற தொடரின் ரீமேக் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியில் அமோக வரவேற்பை பெற்ற இந்த தொடர் விஜய் தொலைக்காட்சியில் ‘என் கணவர் என் தோழன்’ என்ற பெயரில் 927 எபிசோட் வரை மட்டும் தான் ஒளிபரப்பபட்டது.பின்னர் அந்த தொடரை நிறுத்திவிட்டனர்.

ஆனால், ராஜா ராணி 2 தொடர் எதிர்பார்த்தபடி வரவேற்பை பெற்றுள்ளது. ராஜா ராணி சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகையில் ஒருவர் நிஹகரிகா. இவர் தனது புகைப்படம் மற்றும் வீடியோகளை தனது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாகவே வைத்துள்ளார்.இந்நிலையில், நடிகை நிஹகரிகா தனது கணவருடன் எடுத்துக்கொண்ட லிப் லாக் முத்தக்காட்சியை தனது  புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில்  பக்கத்தில் வெளியிட்டு சர்ச்சையை கிளைப்புள்ளார். 

-விளம்பரம்-
Advertisement