பிக் பாஸில் கலந்துகொள்ள தான் ராஜா ராணியில் இருந்து விலகினீங்களா – அர்ச்சனா சொன்ன சூசகமான பதிலை பாருங்க.

0
348
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி மற்றும் ராஜா ராணி சீரியல் குறித்தும் விஜே அர்ச்சனா அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீப காலமாகவே டாப் டிஆர்பி ரேட்டிங்கில் விஜய் டிவி சீரியல்கள் எல்லாம் இருக்கிறது. அந்த வகையில் சீரியல் தொடங்கிய நாளில் இருந்து இன்று வரை விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்று கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்று தான் ராஜா ராணி 2. கடந்த 2019 ஆம் ஆண்டு முடிவடைந்த ராஜா ராணி சீரியல் இளைஞர்கள் முதல் பல குடும்பங்கள் வரை என எல்லோர் மனதில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து ராஜா ராணி 2 என்ற சீரியல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த சீரியல் முழுக்க முழுக்க கூட்டு குடும்ப கதையை மையமாக கொண்டது. இந்த தொடர் ஐபிஸ் ஆக வேண்டும் என்ற லட்சியத்தை நனவாக்க போராடும் ஒரு பெண்ணின் கதை. அதோடு இந்த தொடர் ஹிந்தி சீரியல் Diya Aur Baati Hum ரீமேக் ஆகும். தமிழில் இந்த சீரியலை இயக்குனர் பிரவின் பெண்ணெட் இயக்கி வருகிறார். இந்த தொடரில் சரவணன் என்ற கதாபாத்திரத்தில் சித்து நடிக்கிறார்.

- Advertisement -

ராஜா ராணி 2 சீரியல் :

சந்தியா என்ற கதாபாத்திரத்தில் ஆலியா நடித்து இருந்தார். பின் ஆல்யாவுக்கு குழந்தை பிறக்க இருக்கும் நிலையில் சீரியலில் இருந்து விலகி விட்டார். தற்போது ஆல்யா மானஸாவிற்கு பதிலாக ரியா என்பவர் புதிய சந்தியாவாக நடித்து வருகிறார். தற்போது சீரியலில் ஆதி, ஜெசியை காதலித்து கர்ப்பம் ஆக்கி ஏமாற்றி விடுகிறார். பின் சரவணன் குடும்பத்திற்கு ஆதி செய்த வேலை தெரிய வருகிறது. ஜெசி- ஆதி திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து கொண்டு இருக்கிறது.

சீரியலில் விலகிய நடிகை:

இந்த திருமணம் நல்ல முறையில் நடக்குமா? என்று பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டு இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, சீரியலில் காமெடி வில்லி கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த அர்ச்சனா சமீபத்தில் தான் சீரியலில் விலகி இருந்தார். இந்த தொடரின் மூலம் அர்ச்சனா மக்கள் மத்தியில் பிரபலமானார் என்றே சொல்லலாம். இவருக்கு பதிலாக சீரியல் நடிகை வேறு ஓரு அர்ச்சனா என்பவர் தான் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

அர்ச்சனா அளித்த பேட்டி:

இப்படி சீரியலில் பல மாற்றங்கள் நடந்தாலும் சீரியல் நன்றாக சென்று கொண்டு இருக்கிறது. இந்நிலையில் ராஜா ராணி சீரியல் குறித்தும், பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்தும் அர்ச்சனா அளித்து இருக்கும் பேட்டி சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது. தற்போது அர்ச்சனா பேட்டி ஒன்று கொடுத்திருந்தார். அதில் அவர் கூறியிருந்தது, ராஜா ராணி 2 சீரியல் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஒளிபரப்பாகும் என்று தெரியவில்லை. மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நான் அந்த சீரியலில் நடித்து விட்டேன்.

பிக் பாஸ் குறித்து அர்ச்சனா சொன்னது:

என்னுடைய வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடிவெடுத்து தான் நான் சீரியலில் இருந்து விலகி விட்டேன். அதேபோல் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்வது குறித்து பலரும் பேசியிருந்தார்கள். அது உண்மையா? இல்லையா? என்பது வரும் நாட்களில் தெரியும். பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறி இருக்கிறார். இப்படி விஜே அர்ச்சனா அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது

Advertisement