ராஜா ராணி 2வில் அர்ச்சனாவுக்கு வளைகாப்பு – லீக்கான புகைப்படங்கள் இதோ.

0
391
archana
- Advertisement -

ராஜா ராணி 2 சீரியலின் புதிய அப்டேட் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை சீரியல்கள் விளங்குகிறது. அதிலும் விஜய் டிவி சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்று கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்று தான் ராஜா ராணி 2. கடந்த 2019 ஆம் ஆண்டு முடிவடைந்த ராஜா ராணி சீரியல் இளைஞர்கள் முதல் பல குடும்பங்கள் வரை என எல்லோர் மனதில் பெரும் வரவேற்பை பெற்றது.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து ராஜா ராணி 2 என்ற சீரியல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த சீரியல் முழுக்க முழுக்க கூட்டு குடும்ப கதையை மையமாக கொண்டது. இந்த சீரியல் ஒளிபரப்பான நாளில் இருந்து டிஆர்பியில் முதல் இடத்தை பிடித்து இருக்கிறது. ஐபிஸ் ஆக வேண்டும் என்ற லட்சியத்தை நனவாக்க போராடும் ஒரு பெண்ணின் கதை. இந்த தொடர் ஹிந்தி சீரியல் Diya Aur Baati Hum ரீமேக் ஆகும். மேலும், தமிழில் இந்த சீரியலை இயக்குனர் பிரவீன் பெண்ணெட் இயக்கி வருகிறார்.

- Advertisement -

ராஜா ராணி 2 சீரியல்:

முதல் சீசனை தொடர்ந்து இரண்டாவது சீசனையும் இவரே எடுத்து வருகிறார். இந்த தொடரில் சரவணன் என்ற கதாபாத்திரத்தில் சித்து நடிக்கிறார். சந்தியா என்ற கதாபாத்திரத்தில் ஆலியா நடித்தார். ஆனால், ஆல்யாவுக்கு குழந்தை பிறக்க இருந்த நிலையில் சீரியலில் இருந்து விலகிவிட்டார். தற்போது ஆல்யா மானஸாவிற்கு பதிலாக ரியா என்பவர் புதிய சந்தியாவாக நடித்து வருகிறார். ரியா வந்த பிறகும் சீரியல் விறுவிறுப்பாக தான் சென்று கொண்டு இருக்கிறது.

வில்லி அர்ச்சனா குறித்த தகவல்:

மேலும், இந்த தொடரில் நாயகி சந்தியாவுக்கு இணையாக மக்கள் மத்தியில் படு பேமஸாக இருப்பது வில்லியாக நடிக்கும் அர்ச்சனா கதாபாத்திரம் தான். தான் நினைத்தது நடக்க வேண்டும் என்றால் எந்த எல்லைக்கும் செல்லக் கூடியவர் அர்ச்சனா. இந்த தொடரின் மூலம் அர்ச்சனா மக்கள் மத்தியில் பிரபலமானார். ஆனால், இவரை திட்டி தீர்க்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு சீரியலில் இவர் வில்லியாக கலக்கி வருகிறார். தற்போது சீரியலில் சந்தியாவை போலீஸ் அதிகாரியாக ஆக சிவகாமி அம்மாள் சம்மதிக்கிறார்.

-விளம்பரம்-

சீரியலின் கதை:

வீட்டில் எல்லாருடைய சம்மதமும் பெற்று சந்தியா பரீட்சை எழுத செல்கிறார். ஆனால், சந்தியா போலீஸ் ஆக கூடாது என்று வழக்கம் போல் அர்ச்சனா திட்டம் போடுகிறார். அதை எல்லாம் மீறி சந்தியா தேர்வு எழுதும் இடத்திற்கு செல்கிறார். ஆனால், அங்கு சோதனை செய்பவர் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொள்கிறார். இதை பார்த்து கொந்தளித்து போன சந்தியா நியாயம் கேட்கிறார். சந்தியா தேர்வு எழுதி போலீஸ் அதிகாரியாக ஆகுவாரா? சிவகாமி சொன்னது போல் சந்தியா குடும்பத்தை கவனிப்பாரா? என்று பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டு இருக்கிறது.

வளைகாப்பு எபிசோட்:

இந்நிலையில் சீரியல் குறித்த புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது, சீரியலில் அர்ச்சனா கர்ப்பிணியாக இருக்கிறார். இதனால் இவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. வீட்டில் உள்ள எல்லோரும் அர்ச்சனாவுக்கு வளைகாப்பு செய்து இருக்கிறார்கள். இந்த காட்சி கூடிய விரைவில் டெலிகாஸ்ட் ஆக இருக்கிறது. இதில் அர்ச்சனா என்ன கலவரம் செய்ய போகிறாரோ? இந்த எபிசோடுக்காக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கின்றனர்.

Advertisement