அடித்தது லக், சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பக்கத்தில் அர்ச்சனா – ப்பா, இது சரியான படமாச்சே.

0
381
- Advertisement -

மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை சீரியல்கள் விளங்குகிறது. அதிலும் விஜய் டிவி சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அந்த மத்தியில் விஜய் டிவியில் விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்று கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்று தான் ராஜா ராணி 2. கடந்த 2019 ஆம் ஆண்டு முடிவடைந்த ராஜா ராணி சீரியல் இளைஞர்கள் முதல் பல குடும்பங்கள் வரை என எல்லோர் மனதில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து ராஜா ராணி 2 என்ற சீரியல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த சீரியல் முழுக்க முழுக்க கூட்டு குடும்ப கதையை மையமாக கொண்டது. தற்போது இந்த சீரியல் டிஆர்பியில் முதல் இடத்தில் இருக்கிறது. மேலும், ஐபிஸ் ஆக வேண்டும் என்ற லட்சியத்தை நனவாக்க போராடும் ஒரு பெண்ணின் கதை. இந்த தொடர் ஹிந்தி சீரியல் Diya Aur Baati Hum ரீமேக் ஆகும். மேலும், தமிழில் இந்த சீரியலை இயக்குனர் பிரவீன் பெண்ணெட் இயக்கி வருகிறார்.

- Advertisement -

முதல் சீசனை தொடர்ந்து இரண்டாவது சீசனையும் இவரே எடுத்து வருகிறார்.இந்த தொடரில் சரவணன் என்ற கதாபாத்திரத்தில் சித்து நடிக்கிறார். சந்தியா என்ற கதாபாத்திரத்தில் ஆலியா நடித்து இருந்தார். சந்தியாவை எப்படியாவது போலீஸ் அதிகாரியாக ஆக்க வேண்டும் என்று சரவணன் போராடி வருகிறார். இந்த சுழலில் ஆல்யா இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்தார். இருந்தாலும் இவர் தொடர்ந்து நடித்து வந்தார்.

ஆனால், ஆல்யா குழந்தை பிறக்க இருக்கும் நிலையில் சீரியலில் இருந்து விலகிவிட்டார். தற்போது ஆல்யா மானஸாவிற்கு பதிலாக ரியா என்பவர் புதிய சந்தியாவாக நடித்து வருகிறார்.. இந்த தொடரில் நாயகி சந்தியாவுக்கு இணையாக மக்கள் மத்தியில் படு பேமஸாக இருப்பது வில்லியாக நடிக்கும் அர்ச்சனா கதாபாத்திரம் தான். இந்த தொடரின் மூலம் அர்ச்சனா மக்கள் மத்தியில் பிரபலமானார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் இவரும் தொடரில் இருந்து விலகினார். இதுகுறித்து தெரிவித்த அவர் ‘ ‘நம் வாழ்க்கையில் ஒவ்வொரு தருணமும் நமக்கு புது ஆச்சரியத்தை தினசரி நிகழ்த்திக் கொண்டேதான் இருக்கும். என்னுடைய அடுத்தக்கட்டத்திற்கான திட்டமிடலை தொடங்குவதற்கான நேரம் வந்துவிட்டது. எனக்கு ஒத்துழைப்பு கொடுத்த ஒட்டுமொத்த டீமிற்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைக்கு வரைக்கும் எனக்கு அன்பையும், ஆதரவையும் அளித்துக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் என் நன்றியைச் சொல்ல கடமைப்பட்டிருக்கேன்.

அனைவரையும் என் புது பரிமாணத்தில் சந்திக்கிறேன்’ என்று கூறி இருந்தார். ராஜா ராணி தொடருக்கு பின்னர் இவர் தம்மா துண்டு என்ற வீடியோ பாடலில் நடித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் இவர் அருள்நிதி நடிக்கும் படத்தில் கமிட் ஆகி இருக்கிறார். ஆம், அருள்நிதி நடித்து வரும் டிமான்டி காலனி படத்தின் இரண்டாம் பாகத்தில் அர்ச்சனா ஒரு முக்கிய கதாபாரத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம். மேலும், இப்படத்தில் அருள்நிதியின் தங்கை கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் விஜே அர்ச்சனா கூறியுள்ளார். 

Advertisement