ராஜா ராணி, பூவே உனக்காக போன்ற பலவேறு சீரியல்களில் நடித்து வரும் ஸ்ரீதேவி அசோக்கிற்கு கடந்த சில நாட்களுக்கு முன் குழந்தை பிறந்தது. தமிழில் பல்வேறு சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து இல்லத்தரசிகள் மத்தியில் இடம்பிடித்தவர் ஸ்ரீதேவி. தனுஷ் நடித்த ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ படத்தின் மூலம் தான் தனது திரை வாழ்க்கையை தொடங்கினார். அதன் பின்னர் தமிழில் ‘கஸ்தூரி’, ‘இளவரசி’, ‘வாணி ராணி’ என 20-க்கும் மேற்பட்ட சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து சின்னத்திரையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
இவர் தற்போது சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பூவே உனக்காக’ மற்றும் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘காற்றுக்கென்ன வேலி’ போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார். ராஜா ராணி’ சீரியலில் கொடூரமான வில்லியாக, பார்ப்பவர்களின் கண்களில் கத்திரி வெயிலைக் கடத்திக்கொண்டிருந்தவர், ஶ்ரீதேவி. ஆனால், நிஜத்தில் இவர் மார்கழி மாத அதிகாலைபோல செம கூல், பயங்கர ஜாலி டைப்.
இதையும் பாருங்க : Baby Bumpக்கு கூட மருதாணி – வித்யாசமான Pregnancy போட்டோ ஷூட் நடத்திய பாரதி கண்ணம்மா வெண்பா.
செல்லப் பிராணிகளின் காதலியான ஶ்ரீதேவிக்கு, அவரைப்போலவே செல்லப் பிராணி காதலரான அசோக் சிந்தாலா என்பவருடன் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இவர் கடந்த சில மாதங்களாக கர்ப்பமாக இருந்தார். சமீபத்தில் தனது பிறந்த நாள், வளைகாப்பு, மற்றும் திருமண நாளை குடுத்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் ஸ்ரீதேவி.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவருக்கு பெண் குழந்தை பிறந்து இருந்தது. இதுநாள் வரை தனது மகளின் முகத்தை காட்டாமல் இருந்து வந்த ஸ்ரீதேவி முதன் முறையாக தனது மகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். மேலும், இன்னும் தனது மகளுக்கு பெயர் வைக்கவில்லை என்றும் விரைவில் பெயர் சூட்டு விழா நடத்த இருப்பதாகவும் கூறியுள்ளார்.