ட்ரெண்டிங்காகும் வெட்டிங் போட்டோஷூட். அதுக்கு இது தான் காரணம்- ஓபன் டாக் கொடுத்த ராஜலட்சுமி செந்தில்கணேஷ்

0
981
senthil
- Advertisement -

‘என்ன மச்சான், சொல்லு புள்ள’ என்ற பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ்– ராஜலக்ஷ்மி. விஜய் டிவியில் பல ஆண்டு காலமாக ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கணவன், மனைவி இருவரும் கலந்து கொண்டார்கள். பின் இந்த சூப்பர் சிங்கர் மேடையில் பல நாட்டுப்புற பாடல்களை பாடி செந்தில் கணேஷ் தன்னுடைய விடாமுயற்சியால் பைனலுக்கு சென்று வீட்டை தட்டிச் சென்றார். இந்த நிகழ்ச்சி தான் இவர்கள் வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமைந்தது என்று சொல்லலாம். தற்போது இந்த ஜோடிகள் திரை உலகில் பல பாடல்களை பாடி வருகிறார்கள்.

-விளம்பரம்-

இதனை தொடர்ந்து இருவரும் உள்ளூர், வெளியூர் என பல கச்சேரிகளில் தங்களுடைய நாட்டுப்புற பாடலை பாடி வருகிறார்கள். மேலும், செந்தில் சினிமாவில் ஹீரோவாக படம் ஒன்றில் நடித்து இருந்தார். ஆனால், அந்த படம் மாபெரும் தோல்வியடைந்தது. தற்போது இவர்கள் சொந்தமாக ஒரு ஸ்டூடியோ ஒன்றை வைத்து நடத்தி வருகின்றனர். சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் இடம் பெற்ற ‘வாயா சாமி’ என்ற பாடலை தமிழில் ராஜலக்ஷ்மி தான் பாடி இருந்தார். அதே போல ”வாயா சாமி ” பாடலை செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி இருவரும் ரி – கிரியேட் செய்து வீடியோ வெளியிட்டு இருந்தார்கள்.

- Advertisement -

செந்தில் நடிக்கும் இருளி படம்:

அந்த வீடியோ செம்ம வைரலானது. தற்போது இருவரும் இருளி என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். இப்படி இவர்கள் இருவரும் சினிமாவில் பிசியாக இருந்தாலும் எப்போதுமே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்கள். தான் அடிக்கடி எடுக்கும் போட்டோஷுட் புகைப்படம், வீடியோக்கள், ரசிகர்களுடன் உரையாடல் என அனைத்தையும் சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்கள். சமீப காலமாக இவர்கள் இருவரின் புகைப்படம் எல்லாம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது இவர்கள் இருவரும் மணக்கோலத்தில் நடத்திய போட்டோ ஷூட் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

வைரலாகும் செந்தில் கணேஷ்- ராஜலக்ஷ்மி புகைப்படம்:

இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் காதல் தினம் முடிந்தும் இவர்கள் காதலை தொடர்ந்து கொண்டாடிருக்கிறார்கள் என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் இவர்கள் பதிவிட்டு இருக்கும் புகைப்படத்தில் சில அடையாளமே தெரியாமல் செம மார்டனாக செந்தில் கணேஷ் ராஜலட்சுமி மாறியிருக்கிறார்கள். தற்போது சோஷியல் மீடியாவில் செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி உடைய போட்டோஷுட் புகைப்படம் தான் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது. இந்த நிலையில் இதற்கு பின்னாடி இருக்கும் கதை குறித்து செந்தில் கணேஷ்- ராஜலக்ஷ்மி தம்பதியிடம் பேட்டி எடுக்கப்பட்ட போது அவர்கள் கூறியது,

-விளம்பரம்-

போட்டோ ஷூட்டிற்கு காரணம்:

சென்னையில் பாவனா என்கிற மேக்கப் ஆர்டிஸ்ட் கொலாபரேஷன் ஷூட்டிங்கிற்காக எனக்கு இன்ஸ்டாகிராமில் மெசேஜ் அனுப்பி இருந்தார்கள். போட்டோ ஷூட் பண்ணும் போது தான் நம்மை கொஞ்சம் புதுசாக பார்க்கிற மாதிரி ஒரு பீல் இருக்கும். நாங்கள் ரெண்டு பேரும் எப்பவும் ட்ரெடிஷனல் ஆடைகளிலேயே இருக்கிறதுனால் எங்களுக்கும் அந்த லுக் வேற மாதிரி புதுசாக தெரியும் என்பதால் சரி பண்ணலாம் என்று முடிவு பண்ணினோம். ஆனால், ஆரம்பத்திலேயே ஏற்கனவே பண்ணின போட்டோ ஷூட் மாதிரியே இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக பண்ணலாம் என்று அவர்களிடம் சொல்லி இருந்தோம்.

முதல் வெட்டிங் புகைப்படம்:

அவங்களும் வெட்டிங் தீம் பண்ணலாம் என்று சொன்னார்கள். அது மட்டுமில்லாமல் நிஷா என்கிற காஸ்டியூம் டிசைனர் நாங்க இதுவரை பண்ணிடாத புது லுக்கில் ஆடைகள் டிசைன் பண்ணி தந்தார்கள். அந்த போட்டோகிராஃபரும் எங்களை பொறுமையாகவும் வித்தியாசமாகவும் ரொம்பவே அழகா போட்டோ எடுத்துக் கொடுத்தார். கிராமத்து வீடு செட்டப்பில் வெட்டிங் போட்டோஸ் எடுத்தோம். எங்கள் கல்யாணத்தின் போது சாதாரணமாக மேக்கப் போடுவதற்கு கூட எனக்கு டைம் இல்லை. ஆனால், இப்போ வெரைட்டியான லென்ஸ் பயன்படுத்தி நாங்கள் எடுத்துக் கொண்ட முதல் வெட்டிங் புகைப்படம் இது தான். அவர் கோட் சூட், நான் சல்வர் போட்டுட்டு புகைப்படம் எடுத்தோம்.

ரசிகர்களின் கமெண்ட் :

அந்த சல்வார் எனக்கு செட் ஆகாத மாதிரி பீலிங் இருந்தது. ஆனால், கோட் சூட்டும் அந்தக் கண்ணாடியும் என் கணவருக்கு ரொம்ப அழகாக இருந்தது. போட்டோகிராபர் கிட்ட சொல்லி அவரை தனியா நிறைய போட்டோ எடுக்க சொன்னேன். அவருக்கு நடிப்பில் ஆர்வம் இருக்கு. இந்த காஸ்ட்யூம் மூலமாக இவருக்கு இப்படியான ஆடைகள் தான் செட் ஆகும் என்கிற எண்ணமும் மாறும் என்று நினைக்கிறேன். அதுமட்டுமில்லாமல் இந்த போட்டோ ஷூட் புகைப்படங்களுக்கு பாசிட்டிவ், நெகட்டிவ் என ரெண்டு கமெண்ட்ஸ் வருகிறது. ஆனால், நாங்கள் பாசிட்டிவ் மட்டும் எடுத்துக் கொள்கிறோம் என்று கூறி இருந்தார்கள்.

Advertisement