அயோத்தி ராமர் கோயிலின் திறப்பு விழாவிற்கு செல்லும் முன் செய்தியாளர்களை சந்தித்து ரஜினி அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில தினங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் அயோத்தி ராமர் கோயிலின் திறப்பு விழா குறித்த செய்தி தான் பேசப்பட்டு வருகிறது. உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இருக்கும் ராமர் கோவில் அனைவரும் அறிந்ததே. இந்தக் கோவில் நாட்டின் பாரம்பரியம் மற்றும் உள்நாட்டு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கட்டப்பட்டிருக்கிறது.
ஸ்ரீராம் உள்நாட்டு தீர்த்தத்தின்படி இராமன் கோயில் மூன்று அடுக்குகளை கொண்ட தளம். ஒவ்வொரு தளமும் 20 அடி உயரத்தில் உள்ளது. மொத்தம் 392 தூண்களையும், 44 கதவுகளையும் இந்தக் கோயில் கொண்டுள்ளது. மேலும், அயோத்தியில் ராமர் கோயிலுக்கு செல்லும் மேலும், நுழைவாயிலில் யானைகள், சிங்கங்கள், அனுமான் மற்றும் கருடா போன்ற சிலைகள் இருக்கிறது. பாரம்பரிய முறையில் இந்த கோயில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த புகழ்பெற்ற அயோத்தி ராமர் கோயில் வருகிற 22 ஆம் தேதி அதாவது நாளை திறக்கப்பட இருக்கிறது.
அயோத்தி ராமர் கோவில் விழா:
அந்த தினத்தில் அனைவருமே வீடுகளில் விளக்கேற்ற வேண்டும் என்று இந்திய பிரதமர் மோடி வலியுறுத்தி இருக்கிறார். ஆயிரக்கணக்கான பக்தர்களின் கனவு நினைவாக இருக்கிறது. இந்தியா நாடு முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பிரபலங்கள் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை காண வருகை தர இருக்கிறார்கள். மேலும், இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பொதுமக்களும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
விழா குறித்த தகவல்:
அயோத்திக்கு இந்தியாவில் மட்டுமில்லாமல் வெளியூர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் கோடிக்கணக்கான ராம பக்தர்கள் வருவார்கள் என்று கூறப்படுகிறது. மேலும், ராமர் கோவில் திறப்பு விழாவிற்காக முன்னணி நடிகையும், நடன கலைஞருமான சுகன்யா அவர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என்ற பாடலை எழுதி இசை அமைத்து பாடி இருக்கிறார். பிரபலங்கள் பலர் இந்த விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த்திற்கு ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுவிக்கப்பட்டது.
#SuperstarRajinikanth left from Chennai to #Ayodhya for the #RamTemple consecration ceremony to be held tomorrow.
— Sreedhar Pillai (@sri50) January 21, 2024
pic.twitter.com/w5RyxUwR5c
ரஜினி பேட்டி:
இதனால் ரஜினிகாந்த் அவர்களும் சென்னையிலிருந்து கிளம்பி இருக்கிறார். இந்த நிலையில் இவர் செய்தியாளர்களை சந்தித்து, நாளை ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு செல்வதற்கு சந்தோஷமாக இருக்கிறது. 500 ஆண்டு கால பிரச்சனைக்கு தீர்வு கிடைத்திருக்கிறது. உச்ச நீதிமன்றமே ராமர் கோயிலை திறக்கச் சொல்லி அனுமதி கொடுத்திருக்கிறார்கள். அதை தற்போது நிறைவேற்றி இருக்கிறார்கள். நாடே இந்த நாளுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. இது வரலாற்றில் மிக முக்கியமான நாள் என்று கூறியிருக்கிறார்.
ரஜினி திரைப்பயணம்:
கடைசியாக நடிகர் ரஜினி நடிப்பில் வெளியாகியிருந்த படம் ஜெயிலர். இந்த படத்தை நெல்சன் இயக்கியிருக்கிறார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்திருந்தது. இதனை அடுத்து ரஜினி அவர்கள் லால் சலாம் என்ற படத்தில் கௌரவ இடத்தில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து தற்போது நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் வேட்டையன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்கியிருக்கிறார்.