ஆண்டாள் குறித்து பேசியதாக கவிப்பேரரசு வைரமுத்து மீது ஏவப்பட்ட வன்மமான அரசியல் குறித்த பார்வை தற்போது அனைவரது கண்ணிலும் மாறுபட துவங்கி உள்ளது.
இந்த விசயத்தில் பல சாமான்ய மக்களும் வைரமுத்துவுக்கு ஆதரவு கொடுத்தனர். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களும், இயக்குனர் பாரதிராஜாவும் அவருக்கு ஆதரவு கொடுத்தனர். திரையுலகில் இருந்து இந்த இருவர் மட்டுமே இந்த பிரச்சனையில் வாய் துறந்தனர்.
ஆனால் கவிபேசுரரசுவிற்கு மிக மிக நெருக்கமான நண்பர்களான ரஜினி மட்டும் கமல் ஆகியோர் வாய் திறக்கவில்லை. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பீட்டா அமைப்பில் இருந்த திரிஷா போராட்டம் செய்தவர்களை பற்றி தரக் குறைவாக பேசினார். அப்போது அவருக்கென ஓடோடி வந்து தெறியாமல் செய்துவிட்டார் திரிஷா நாம் மன்னித்துபிடுவோம், அதுதான் தமிழர்களின் பண்பாடு என கூறிய கமல்ஹாசன் இந்த பிரச்சனையில் ஓடி ஒழிந்துகொண்டார்.
ஆனால் ரஜினி கமல் ஆகிய இருவரையும் என் இரு கண்கள் எனக் கூறி போற்றியவர் கவிப்பேரரசு. இதுகுறித்து, உங்கள் கண்கள் எனக் கூறிய இருவரில் ஒருவர் கூட உங்களுக்கு ஆதரவாக பேசவில்லையே, என வைரமுத்துவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பெருந்தன்மை வாய்ந்த கவிப்பேரரசு, ‘கண்கள் பேசுவதில்லை’ என பாணியில் பதில் கொடுத்தார்.