ரஜினி படம் பார்த்து என் மகன் பைத்தியம் ஆகிவிட்டான் என்று ஜெயிலர் படம் தியேட்டர் வாசலில் கண்ணீருடன் தாய் அளித்திருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டார் திகிழ்ந்து கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. இதனால் இவருக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அந்த வகையில் ரஜினி படத்தை பார்த்து அவர் ரசிகராக பைத்தியமாகவே தன் மகன் மாறிவிட்டான் என்று தாய் ஒருவர் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதில் அவர், என்னுடைய மகன் ரஜினியின் தீவிர ரசிகன். எப்போதும் அவர் படத்தை தான் பார்த்துக் கொண்டிருப்பார். அவரால் நடக்க முடியவில்லை. இது குறித்து அவனுக்கு இன்னும் கல்யாணம் கூட பண்ணவில்லை.

Advertisement

ரஜினி ரசிகர் தாய் வீடியோ:

இது குறித்து நான் ரஜினியிடம் பேசி இருக்கிறேன். அவருடன் அடுத்த புகைப்படங்கள் இதோ. என் மகனுக்கு உதவி செய்யுங்கள் என்று அவர் வீட்டு வாசலில் நான் நின்று இருக்கிறேன். ஆனால், அவரை பார்க்க முடியாது என்று அனுப்பி விடுவார்கள். ரொம்ப நாட்களாக நானும் உதவி கேட்டு கொண்டே தான் இருக்கிறேன். ஆனால், அவர் உதவி செய்த பாடில்லை. இன்று அவருடைய ஜெயிலர் படம் வெளியாகி இருக்கிறது. இதை பார்த்தாவது என் மகனுக்கு தயவுசெய்து ரஜினி ஐயா உதவி செய்யுங்கள் என்று கண்ணீர் மல்க கூறியிருக்கிறார்.

வைரலாகும் வீடியோ:

தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்து ரஜினி உதவி செய்வாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். தற்போது ரஜினி “ஜெயிலர்” என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார்.

Advertisement

ஜெயிலர் படம்:

படத்தின் பாடல்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் பட்டைய கிளப்பி இருக்கிறது. மேலும், இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்னன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, வசந்த் ரவி, தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெரப் போன்ற பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் நேற்று ஜெயிலர் திரைப்படம் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது.

Advertisement

படம் குறித்த தகவல்:

படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருக்கிறது. மேலும், இந்த படம் முதல் நாளிலேயே உலக அளவில் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் சாதனை செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் பாராட்டி இருக்கிறார்கள்.

Advertisement