என் வாழ்க்கையில் நான் அனைத்து உச்சங்களையும் தொட்டுவிட்டேன். ஆனா 10%கூட நிம்மதி இல்ல – ரஜினியின் வீடியோ வைரல்.

0
531
rajini
- Advertisement -

கிரியா யோகா நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கூறி இருக்கும் விஷயம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் கர்நாடக மாநிலத்தில் பேருந்து நடத்துனராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கி இன்று இந்திய திரையுலகில் மிகப் பெரிய ஸ்டாராக ஜொலித்து கொண்டிருக்கிறார். இதுவரை இவர் 168 படங்களில் நடித்து முடித்திருக்கிறார். இவருடைய படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது.

-விளம்பரம்-
jailer

சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் வசூலில் கோடிகளை குவித்து இருக்கிறது. குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும், குடும்ப பாசத்தையும் மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருந்தது. இதனை தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த் அவர்கள் ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நெல்சன் குமார் இயக்குகிறார்.

- Advertisement -

இதையும் பாருங்க : தேசிய விருது வென்ற நடிப்பின் நாயகன் சூர்யா – தன் முதல் படம் முதல் மனைவி, பிள்ளைகள் வரை நன்றி சொல்லி வெளியிட்ட உருக்கமான அறிக்கை.

ஜெயிலர் படம்:

இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் பிரியங்கா மோகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கிளி அரவிந்த், இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் என பலரும் இந்த படத்தில் நடிக்க இருக்கிறார்கள். இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற கிரியா யோகா நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.

-விளம்பரம்-

கிரியா யோகா நிகழ்ச்சி:

பின்னர் அவர் தமிழாக்கம் செய்யப்பட்ட யோகதா சத்சங்க நூலை வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கூறியது, யோகா நிகழ்ச்சிக்கு இவ்வளவு பெரிய கூட்டம் வருமென்று நான் எதிர்பார்க்கவில்லை. எத்தனையோ படங்கள் நடித்திருந்தாலும் எனக்கு ஆத்ம திருப்தி கொடுத்தது ராகவேந்திரா, பாபா படங்கள் தான். இந்த இரு படங்கள் வந்த பின்னர் தான் அனைவருக்கும் இவர்கள் இருவரையும் தெரிய வந்தது. எனக்கு மிகவும் சந்தோஷமான விஷயம். என் ரசிகர்கள் இருவர் சன்னியாசியாக மாறியுள்ளனர்.

நிகழ்ச்சியில் ரஜினி சொன்னது:

ஆனால், நான் இன்னும் நடிகராக இருக்கிறேன். இமயமலை இயற்கையாகவே அமைந்துள்ள குகைகள் சொர்க்கம் போல் காட்சியளிக்கும். குகைகளில் சில மூலிகைகள் கிடைக்கும். அதனை சாப்பிட்டால் ஒரு வாரத்திற்கான புத்துணர்ச்சி அதிகமாக கிடைக்கும். கங்கை நதி ஏன் புனிதம் என்றால், மூலிகைகள் எல்லாம் அதில் கலக்கும். அதுமட்டுமில்லாமல் அங்கே உள்ள சித்தர்கள் குளிப்பதால் அந்த நதி பவித்ரமாக இருக்கும். உடல்நிலையை பாதுக்காக்க வேண்டும். உணவு சரியாக எடுத்துக்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்ய வேண்டும். சிறுவயதில் உடல் ஆரோக்கியத்தை பாதுக்காப்பை விட வயது முதிர்ந்த பின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

உடல் ஆரோக்கியம் குறித்து ரஜினி கூறியது:

ஏனென்றால், சொத்துகளை விட்டுச் செல்வதை விட நோயாளியாக இருந்திடக் கூடாது. இது அனைவருக்கும் துன்பம். அதேபோல் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு நல்ல உபதேசங்கள் தான். பெற்றோர், ஆசிரியர்கள் சொல்வதை கேட்க வேண்டும். நல்ல சிந்தனைகளுக்காக புத்தகங்களை வாசிக்க வேண்டும். மனிதர்கள் கடந்த காலங்களையும், எதிர்காலத்தையும் நினைத்து கவலைக் கொள்வர். ஆனால், குழந்தைகள் அப்படியல்ல. வலிகளில் இருந்து வெளிவர நிகழ் காலத்தில் சிந்தனையை வைக்க வேண்டும். வாழ்க்கையில் பணம், பேர், புகழ் எல்லாவற்றையும் கடந்து நிம்மதியாக இருக்க வேண்டும். என் வாழ்க்கையில் நான் அனைத்து உச்சங்களையும் தொட்டுவிட்டேன். ஆனால், சித்தர்களிடம் உள்ள நிம்மதி, சந்தோஷம் 10 சதவீதம் கூட இதுவரை எனக்கு கிடைக்கவில்லை என்று கூறி இருக்கிறார்.

Advertisement