சொந்த ஊரில் அமைக்கப்பட்ட ரஜினி பெற்றோர்களின் நினைவிடத்தால் தீர்ந்த ஊர் மக்களின் அத்யாவசிய பற்றாக்குறை. முதல் முறையாக நேரில் சென்ற ரஜினி

0
1477
Rajini
- Advertisement -

முதன் முறையாக சொந்த ஊரில் அமைந்து இருக்கும் தனது பெற்றோர்களின் நினைவிடத்திற்கு நேரில் சென்று வழிபட்டார் ரஜினிகாந்த். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமம் தான் நாச்சிகுப்பம். இந்த கிராமத்தில் தான் ரஜினிகாந்தினுடைய மூதாதையர்கள், பெற்றோர்கள் எல்லோரும் வாழ்ந்தனர். இன்றும் ரஜினிகாந்த் உடைய உறவினர்கள் இந்த கிராமத்தில் வாழ்ந்து வருகின்றனர்.அது மட்டும் இல்லாமல் ரஜினிகாந்தின் அண்ணன் சத்தியநாராயண ராவ் அவர்கள் தங்கள் உறவினர்களின் சுக துக்க நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.

-விளம்பரம்-

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே தன்னுடைய சொந்த கிராமத்தில் தன்னுடைய பெற்றோரானா ரானோஜிராவ் – ராம்பாய் நினைவகம் அமைப்பதற்காக 2.40 ஏக்கர் அளவில் நிலத்தை வாங்கி இருந்தார் ரஜினி.பின் தன்னுடைய அண்ணன் சத்தியநாராயண ராவ் மூலம் அந்த நிலத்தில் அடிகல்லும் நாட்டினார். நிலத்தைச் சுற்றி வேலையும் அமைத்து பெயர் பலகையும் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்குப் பிறகு அந்த நிலத்தில் எந்தவித பணிகளும் செய்யவில்லை.

- Advertisement -

ரானோஜிராவ் – ராம்பாய் நினைவகம்:

ஆனால், இந்த இடத்தில் ரஜினி உடைய ரசிகர்கள் பொங்கல் விழா, நலத்திட்ட உதவிகள் போன்ற பல நிகழ்ச்சிகளை நடத்தி இருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாச்சிகுப்பம் கிராமத்தில் உள்ள தங்களுடைய நிலத்தை ரஜினி உடைய அண்ணன் பராமரித்து வருகிறார்.தற்போது இந்த நிலத்தில் ரஜினியின் பெற்றோரானா ரானோஜிராவ் – ராம்பாய் ஆகியோரின் சிலைகளை அமைத்து நினைவுகள் கட்டப்பட்டிருக்கிறது.

ஊர் மக்களுக்கு நடந்த நன்மை :

அது மட்டும் இல்லாமல் கிராம மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரும், கால்நடைகளுக்கு தனியாக தண்ணீரும் வழங்கி வருகின்றனர். தற்போது இந்த தகவல் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும், இது குறித்து ரஜினியின் அண்ணன் கூறியிருப்பது, கடந்த 2022 ஆம் தேதியே என்னுடைய பெற்றோருக்கு நினைவகம் கட்டி முடிக்கப்பட்டது.கிராம மக்களுக்கும் கால்நடைகளுக்கும் குடிநீர் வழங்கும் வகையில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டு அங்கிருந்து குழாய்கள் அமைத்து தண்ணீர் வழங்கப்படுகிறது.

-விளம்பரம்-

மக்களின் குறை :

மேலும், இங்கு செய்யப்படும் பணிகளை எல்லாம் ரஜினிக்கு வீடியோக்கள், படங்களை மூலம் எடுத்து அனுப்பி வைக்கிறோம். அடிக்கடி தகவல்களையும் சொல்லிக் கொண்டிருக்கிறோம். இங்கு வரவேண்டும் என்பது ரஜினிக்கு ஆசையாக இருக்கிறது. ஆனால், தொடர்ந்து படப்பிடிப்பு இருப்பதால் அவரால் வர முடியவில்லை. இதுகுறித்து அந்த ஊர் மக்கள் பேசுகையில் இதுவரை ஒரு முறை கூட இங்கு வரவில்லை. அதுதான் எங்களுக்கு மனக்குறையாகவே இருக்கிறது.

முதல் முறையாக வந்த ரஜினி :

அவர் அரசியலுக்கு வந்திருந்தால் கண்டிப்பாக இங்கு வந்திருக்க வாய்ப்புஇருந்து இருக்கும். தற்போது அவர்களின் பெற்றோருடைய சிலை வைத்து நினைவகம் அமைக்கப்பட்டிருப்பதால் ரஜினி ஒரு முறையாவது வருவார் என்று நம்புகிறோம் என்று கூறி இருந்தனர். இப்படி ஒரு நிலையில் ரஜினிகாந்த் இன்று தனது பூர்விக கிராமமான நாச்சிக்குப்பத்துக்கு, தனது சகோதார் சத்தியநாராயண ராவுடன் வருகை தந்தார்.

ஏமாற்றமடைந்த ஊர் மக்கள் :

மதியம் 12 மணியளவில், நாச்சிக்குப்பத்திற்கு வந்தவர், நினைவகத்தில் அமைக்கப்பட்டுள்ள பெற்றோர் ரானோஜிராவ் – ராம்பாய் சிலைகளுக்கும், சுவாமி சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தோட்டத்தை சுற்றி பார்த்த ரஜினிகாந்த், அங்கிருந்த தனது உறவினர்கள், தோட்டத்தில் பணிபுரிபவர்களிடம் நலம் விசாரித்தார். 15 நிமிடங்கள் மட்டுமே அங்கிருந்த ரஜினிகாந்த், கார் மூலம் கிருஷ்ணகிரி வழியாக சென்னைக்கு புறப்பட்டு சென்றார். ரஜினிகாந்த் வந்துள்ளதை அறிந்து அங்கு வந்த உள்ளூர் மக்கள், அவர் சென்றுவிட்டதை அறிந்து ஏமாற்றம் அடைந்தனர். 

Advertisement