அட்டகத்தி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குநர் பா ரஞ்சித் அதன் பின்னர் சூப்பர் ஸ்டாரை வைத்து கபாலி, காலா என்று இரண்டு படங்களை எடுத்து விட்டார்.இதில் காலா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தது.
காலா படத்திற்கு பின்னர் பேப்பர் ரஞ்சித் யாரை வைத்து படம் இயக்க போகிறார் என்ற மிகப்பெரிய கேள்வி இருந்து கொண்டுதான் வருகிறது.இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகமும் பற்றி சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் இயக்குனர் ரஞ்சித்.
சமீபத்தில் இயக்குனர் ரஞ்சித் ஒரு புத்தக வெளியீட்டு விழாவிற்கு சென்றிருந்தார். இந்த விழாவில் பலரும் கலந்து கொண்டு பேசினர். மேலும், இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஞ்சித்திடம் காலா படம் பற்றி கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ரஞ்சித் காலா திரைப்படம் கண்டிப்பாக உருவாகாது அந்த படம் உருவாக வாய்ப்பு கிடையாது சமீபத்தில் ஜோதிகா நடிப்பில் வெளியான ராட்சசி என்ற படத்தின் ட்ரைலரைப் பார்த்தேன் .அந்த டைலர் மிகவும் அருமையாக இருந்தது .அந்த டிரெய்லரில் கூட அம்பேத்கரை புகைப்படத்தை மையப்படுத்தி வெளியீட்டு விழா நடந்துள்ளது. மேலும் காலத்தில் பள்ளிக்கல்வி அவல நிலைகளையும், கொடுமைகளைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டது இருந்தது என்று கூறியுள்ளார் ரஞ்சித்.