பூர்வீக கிராமத்தில் பெற்றோருக்கு ரஜினி வைத்த சிலையால் தீர்ந்த ஊர் மக்களின் அத்யாவசிய பற்றாக்குறை .

0
900
rajinikanth
- Advertisement -

தன்னுடைய பெற்றோருக்கு சொந்த ஊரிலேயே ரஜினிகாந்த் சிலை வைத்து நினைவகம் அமைத்திருக்கும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமம் தான் நாச்சிகுப்பம். இந்த கிராமத்தில் தான் ரஜினிகாந்தினுடைய மூதாதையர்கள், பெற்றோர்கள் எல்லோரும் வாழ்ந்தனர். இன்றும் ரஜினிகாந்த் உடைய உறவினர்கள் இந்த கிராமத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

-விளம்பரம்-

அது மட்டும் இல்லாமல் ரஜினிகாந்தின் அண்ணன் சத்தியநாராயண ராவ் அவர்கள் தங்கள் உறவினர்களின் சுக துக்க நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் பூர்வீக கிராமத்தில் தன்னுடைய பெற்றோருக்கு ரஜினிகாந்த் சிலை வைத்திருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே தன்னுடைய சொந்த கிராமத்தில் தன்னுடைய பெற்றோரானா ரானோஜிராவ் – ராம்பாய் நினைவகம் அமைப்பதற்காக 2.40 ஏக்கர் அளவில் நிலத்தை வாங்கி இருந்தார் ரஜினி.

- Advertisement -

பின் தன்னுடைய அண்ணன் சத்தியநாராயண ராவ் மூலம் அந்த நிலத்தில் அடிகல்லும் நாட்டினார். நிலத்தைச் சுற்றி வேலையும் அமைத்து பெயர் பலகையும் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்குப் பிறகு அந்த நிலத்தில் எந்தவித பணிகளும் செய்யவில்லை. ஆனால், இந்த இடத்தில் ரஜினி உடைய ரசிகர்கள் பொங்கல் விழா, நலத்திட்ட உதவிகள் போன்ற பல நிகழ்ச்சிகளை நடத்தி இருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாச்சிகுப்பம் கிராமத்தில் உள்ள தங்களுடைய நிலத்தை ரஜினி உடைய அண்ணன் பராமரித்து வருகிறார்.

ரானோஜிராவ் – ராம்பாய் நினைவகம்:

தற்போது இந்த நிலத்தில் ரஜினியின் பெற்றோரானா ரானோஜிராவ் – ராம்பாய் ஆகியோரின் சிலைகளை அமைத்து நினைவுகள் கட்டப்பட்டிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் கிராம மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரும், கால்நடைகளுக்கு தனியாக தண்ணீரும் வழங்கி வருகின்றனர். தற்போது இந்த தகவல் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும், இது குறித்து ரஜினியின் அண்ணன் கூறியிருப்பது, கடந்த 2022 ஆம் தேதியே என்னுடைய பெற்றோருக்கு நினைவகம் கட்டி முடிக்கப்பட்டது.

-விளம்பரம்-

ரஜினி அண்ணன் கூறியது:

கிராம மக்களுக்கும் கால்நடைகளுக்கும் குடிநீர் வழங்கும் வகையில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டு அங்கிருந்து குழாய்கள் அமைத்து தண்ணீர் வழங்கப்படுகிறது. மேலும், இங்கு செய்யப்படும் பணிகளை எல்லாம் ரஜினிக்கு வீடியோக்கள், படங்களை மூலம் எடுத்து அனுப்பி வைக்கிறோம். அடிக்கடி தகவல்களையும் சொல்லிக் கொண்டிருக்கிறோம். இங்கு வரவேண்டும் என்பது ரஜினிக்கு ஆசையாக இருக்கிறது. ஆனால், தொடர்ந்து படப்பிடிப்பு இருப்பதால் அவரால் வர முடியவில்லை.

ஊர் மக்கள் சொன்னது:

நிச்சயம் ரஜினி ஒரு நாள் இங்கு வருவார். நான் அடிக்கடி இந்த இடத்தில் வந்து பணிகளை மேற்பார்வை செய்து வருகிறேன் என்று கூறினார். இவரை அடுத்து இது குறித்து ஊர்மக்கள் கூறியது, ரஜினிகாந்த் எங்கள் ஊர்க்காரர் என்பது சொல்லும் போது பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது. ஆனால், அவர் இதுவரை ஒரு முறை கூட இங்கு வரவில்லை. அதுதான் எங்களுக்கு மனக்குறையாகவே இருக்கிறது. அவர் அரசியலுக்கு வந்திருந்தால் கண்டிப்பாக இங்கு வந்திருக்க வாய்ப்பு இருக்கு. தற்போது அவர்களின் பெற்றோருடைய சிலை வைத்து நினைவகம் அமைக்கப்பட்டிருப்பதால் ரஜினி ஒரு முறையாவது வருவார் என்று நம்புகிறோம் என்று கூறியிருந்தார்கள்.

Advertisement