சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் “பேட்ட” படத்தில் நடித்து வருகிறார். ஷங்கர் இயக்கத்தில் “2.0” படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் தற்போது “பேட்ட ” படத்தின் படப்பிடிப்பில் பங்குபெற்று இருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த.
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் உத்தர பிரதேச மாநிலம் லக்நோவில் நடைபெற்று வருகிறது. ஒரு மாத காலத்திற்கு இந்த படத்தின் படப்பிடிப்புகள் லக்னோவில் தான் நடக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், ரஜினியின் பாதுகாப்பிற்காக உத்தர பிரதேச அரசு 25 காவலர்களையும் அனுப்பி வைத்துள்ளது.
படு மும்மரமாக நடந்து வரும் படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வரும் நிலையில் அண்மையில் படப்பிடிப்பு தளத்தில் ரஜினி இருக்கும் சில புகைப்படங்களும் வெளியாகியுள்ளது. தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
சன் பிசர்ஸ் தயாரித்து வரும் “பேட்ட” படத்தில் விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா போன்ற பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியிருந்த நிலையில் தற்போது படப்பிடிக்கு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.