பாலிவுட்டில் சர்ச்சைக்கு பெயர் போனவர் ராக்கி சவாந்த். வருடம் முழுவதும் இவரது பெயர் எங்காவது ஒரு இடத்தில் அடிப்பட்டுக்கொண்டே இருக்கும். தற்போது பிரபல டிவி தொகுப்பாளர் தீபக் காலால் என்பவருடன் டிசம்பர் 31 ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் திருமணம் நடைபெற உள்ளது.
தனது இரண்டாவது திருமணம் குறித்து பேசியுள்ள ராக்கி, டிவி நிகழ்ச்சியில் நானும் தீபக்கும் சந்தித்தோம். இருவரும் பழகினோம். அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாகச் சொன்னார். இதுதான் என் திருமணத்துக்கு சரியான தருணம் என நினைத்து சம்மதித்தேன். இதையடுத்து இரு வீட்டு குடும்பத்தினரும் பேசி திருமணத்தை முடிவு செய்துள்ளோம். எங்கள் திருமணம் டிசம்பர் 30 தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கிறது என்று தெரிவித்தார்.
இந்நிலையில் தனது திருமண பத்திரிகையை தனது இன்ஸ்டாகிராம் பக்க்கத்தில் பதிவிட்டார் ராக்கி சவாந்த்.அந்த திருமண பத்திரிகையோடு மற்றொரு புகைப்படமும் இருக்கிறது. அதில் திருமணத்திற்கு முன்னதாக ராக்கி சாவத்தும் அவருடைய வருங்கால கணவர் தீபக்கும் சேர்ந்து மருத்துவரை அணுகியதாகவும், இவர்கள் இருவரும் விர்ஜின் அதாவது கன்னி காழியாதவர்கள் என்று மருத்துவர் சான்றிதழ் கொடுத்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராக்கி சாவந்த, கடந்த 2009-ல் டிவி சேனல் ஒன்று நடத்திய சுயம்வரம் நிகழ்ச்சியில் மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்து திருமணம் செய்து கொள்வதாக அறிவித்தார். அதன்படி அந்த நிகழ்ச்சியில் 15 பேரில் எலிஸ் என்பவரைத் தேர்ந்தெடுத்தார். திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. பின்னர் கருத்துவேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்தார் ராக்கி என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் நீங்கள் கன்னித்தன்மை உடையவரா என்று ராக்கி சவாந்த்தை ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.