இந்தி நடிகையான ராக்கி சவந்த் பாலிவுட் சினிமாவில் சர்ச்சைக்குரிய நபராக இருந்து வருகிறார். சமீபத்தில் மல்லியுத்த போட்டி ஒன்றிற்கு சிறப்பு விருந்தினராக சென்ற இவர், மல்லியுத்த வீராங்கனையுடன் மல்லுயிட்டு தனது முதுகெலும்பை உடைத்துக்கொண்டுள்ளார்.
தமிழில் ஒரு சில படங்களில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடியவர் நடிகை ராக்கி சவந்த். சமீபத்தில் பஞ்சாப் மாநிலம் சண்டிகரை அடுத்த ஒரு நகத்தில் நடைபெற்ற மல்லியுத்த போட்டிக்கு சிறப்பு விருந்தினராக சென்றுள்ளார்.அந்த போட்டியில் பல போட்டியாளர்களை வென்ற ஒரு மல்லியுத்த வீராங்கனை தன்னை ஜெயிக்க யாரும் இல்லையா என்று மேடையில் இருந்து சவால் விட்டுள்ளார்.
இதனை கேட்டு சிலிர்த்தெழுந்த நடிகை ராக்கி சவந்த்,மல்லியுத்த மேடையில் ஏறி, தனக்கு நிகராக நடனமாடினால் போட்டியிட தயார் என்று மல்லியுத்த வீராங்கனையிடம் சவால் விட்டுள்ளார். பின்னர் இருவரும் நடனமாடி கொண்டிருந்தனர்.
ஒரு கட்டத்தில் நடனமாடிய கையோடு, ராக்கி சவந்த்தை தலை கீழாக தூக்கிய மல்லியுத்த வீராங்கனை, அவரை மேடையில் பலமாக வீசினார். இதனால் ராக்கி சவாந்த்தின் முதுகெலும்பில் சிறிய விரிசல் ஏற்பட்டுள்ளது.தற்போது நடிகை மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.