தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் ராகுல் ப்ரீத் சிங். சமீபத்தில் ராகுல் ப்ரீத் சிங் காரில் இருந்து அரைகுறை ஆடையுடன் இறங்கும் புகைப்படம் ஒன்று வெளியானது. அந்த புகைப்படத்தை கண்ட ஒரு ட்விட்டர் வாசி காரில் வேலையை முடித்துவிட்டு பேண்டை மறந்து விட்டுவிடீர்களா என்று மோசமாக விமசரித்தார்.

அதற்கு பதிலடி கொடுத்த ராகுல் ப்ரீத் சிங், உங்கள் ஆமா தான் காரில் நிறையை வேலை செய்திருப்பார் என்று நினைக்கிறேன். நீங்களும் அதில் நிபுணர் என்று நினைக்கிறேன். உங்களுக்கு நல்ல புத்தியை கொடுக்க வேண்டும் என்று அவரிடம் கேளுங்கள். கூடவே அவர் செய்த வேலைகளையும் கேளுங்கள் என்று படு மோசமாக அந்த நபரை விமர்சித்தார்.
இதையும் படியுங்க : போட்டோ வெளியிட்டு வசமாக மாட்டிக்கொண்ட ராகுல் ப்ரீத் ! புகைப்படம் உள்ளே !
வேலை ராகுல் ப்ரீத் சிங்கின் இந்த மோசமான பதிவை கண்டு பலரும் கொந்தளித்துள்ளனர். ஆடையை விமர்சித்த நபரை சாடாமல் அவரது தாயை பழிப்பது எந்த விதத்தில் நியாயம் என்று பலரும் ராகுல் ப்ரீத் சிங்கை வறுத்தெடுத்து வருகின்றனர்.
https://twitter.com/Rakulpreet/status/1085729203285299200
ஆனால், அதனை பெரிதும் பொருட்படுத்தாத ராகுல் ப்ரீத் சிங், நான் செய்த தவறை மட்டும் குறை சொல்லும் நபர்கள் அனைவரும் அந்த நபர் செய்த தவறை ஏன் சுட்டிகாட்ட மாட்ரீங்க. அந்த நபர் உணரவே நான் அப்படி செய்தேன். அந்த நபரின் செயலை கண்டு அவரது அம்மாவும் அவரை அரைவார் என்று பதிவிட்டுள்ளார்.





