என்னது ராமநாதபுர மன்னருக்கும் பிரேமிற்கும் இப்படி ஒரு உறவு முறையா – அப்போ பிரேம் ராஜவம்சத்தை சேர்ந்தவரா.

0
1494
- Advertisement -

நடிகர் பிரேம்குமாரின் மாமாவும், ராமநாதபுரம் சமஸ்தானத்தில் இளைய மன்னர் ராஜகுமாரன் சேதுபதி இன்று மாரடைப்பால் இறந்த சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தென் தமிழகத்தின் பிரிக்கப்படாத பழைய ராமநாதபுரம் மாவட்டத்தின் பெரும் பகுதியை ஆட்சி செய்தவர்கள் சேதுபதிகள். வங்கக்கரையின் அதிபதியாய் முதலில் போகளூரையும் பின்னர் ராமநாதபுரத்தையும் தலைநகராக்கி ஆட்சி புரிந்தவர்கள் சேதுபதிகள் ஆவர். சேது கரைக்கு அதிபதிகளாக திகழ்ந்ததால் இவர்கள் சேதுபதிகள் என்று அழைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

அந்த வகையில் தற்போது ராமநாதபுரம் அரண்மனையில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் குமரன் சேதுபதி. இவர் ராமேஸ்வரம் திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர், அண்ணாமலை பல்கலைக்கழக சிறப்பு செனட் உறுப்பினர், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக செனட் உறுப்பினர், ராமநாதபுரம் மாவட்ட காலந்து சங்க தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளையும் இவர் வகித்திருக்கிறார். இப்படி ஒரு நிலையில் கடந்த சில நாட்களாகவே இவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்திருக்கிறார்.

- Advertisement -

நடிகர் பிரேமின் பதிவு:

பின் திடீரென்று இன்று ராஜா குமரன் சேதுபதி மாரடைப்பால் இறந்துள்ளார். தற்போது அவருக்கு ஐம்பத்தி ஆறு வயது தான் ஆகிறது. இவருடைய மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ராஜகுமாரன் சேதுபதி இறந்ததை அடுத்து நடிகர் பிரேம் குமார் அவரின் புகைப்படத்தை பதிவிட்டு இரங்கல் பதிவு ஒன்று போட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, எனது மாமன் மகனான ராமநாதபுரம் மன்னர் திரு குமரன் சேதுபதி அவர்கள் காலமானார்.

ராஜவம்சத்தை சேர்ந்த நடிகர்:

இதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டிருக்கிறார். இப்படி நடிகர் பிரேம்குமார் பதிவிட்ட பதிவு சோசியல் மீடியாவில் வைரலானது. இதன்மூலம் நடிகர் பிரேம் குமாரின் மாமா தான் ராஜகுமாரன் சேதுபதி. இதுநாள் வரைக்கும் பிரேம்குமார் ராஜ குடும்பத்தை சேர்ந்தவர் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. தற்போது இந்த பதிவின் மூலம் இவர் ராஜ வம்சத்தை சேர்ந்தவர் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. தென்னிந்திய சினிமா உலகில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிப்பவர்கள் மக்களிடையே பிரபலமாவது கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான்.

-விளம்பரம்-

நடிகர் பிரேமின் திரைப்பயணம்:

அதிலும் ஒரு சில பேர் மட்டும் தான் மக்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்திருப்பார்கள். அந்த வகையில் ஒருவர் தான் நடிகர் பிரேம். இவர் பெரும்பாலும் படங்களில் குணச்சித்திர வேடங்களில் தான் நடித்து இருக்கிறார். மேலும், இவர் பலரின் ஃபேவரட் நடிகர் என்ற பட்டத்தையும் பெற்று இருக்கிறார். நடிகர் பிரேம் அவர்கள் விஜய், சூர்யா என சினிமா துறையில் உள்ள பல முன்னணி நட்சத்திரங்களின் படத்தில் நடித்து இருக்கிறார்.

பிரேம் மகன் நடித்த படம்:

நடிகர் பிரேம் அவர்கள் தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் பல படங்களில் நடித்து இருக்கிறார். அதிலும் மாதவனுடன் இணைந்து இவர் நடித்த விக்ரம் வேதா திரைப்படத்தில் இவரது நடித்த பெரிதும் பாராட்டப்பட்டு இருந்தது தற்போது இவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து கொண்டு இருக்கிறார். மேலும், இவருடைய மகன் கௌஷிக் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து இருக்கிறார். அதேபோல் சமுத்திரக்கனியின் அடுத்த சாட்டை படத்தில் கதாநாயகனாக கௌஷிக் நடித்து இருக்கிறார்.

Advertisement