10 ஆண்டுகள் கழித்து சிரஞ்ஜீவி குடும்பத்துக்கு வர இருக்கும் வாரிசு – ராம்சரண் மனைவிக்கு நடந்த வளைகாப்பு.

0
435
ramcharan
- Advertisement -

நடிகர் ராம் சரணின் மனைவி கர்ப்பமாக இருக்கும் நிலையில் தற்போது அவருக்கு வளைகாப்பு நடைபெற்று இருக்கிறது. தெலுங்கு சினிமா உலகில் மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் ராம் சரண். இவர் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த சிறுத்தை என்ற திரைப்படத்தின் மூலம் தான் சினிமா துறைக்கு அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார். அதோடு இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ஆவார். தந்தையைப் போலவே மகனும் டோலிவுட்டில் பட்டையை கிளப்பிக் கொண்டு வருகிறார். ராம் சரண் அவர்கள் நடிகர் மட்டும் இல்லாமல் திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார். அதேபோல் இவருடைய நடிப்பில் வந்த மாவீரன், ரங்கஸ்தலம் போன்ற படங்கள் எல்லாம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது.

- Advertisement -

ராம் சரண் திரைப்பயணம்:

சமீபத்தில் நடிகர் ராம் சரண் அவர்கள் தெலுங்கில் பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான RRR என்ற படத்தில் நடித்து இருந்தார்.இந்த படத்தில் ராம் சரணுடன் பிரபலமான நடிகர் ஜூனியர் என்டிஆரும் இணைந்து நடித்து இருந்தார். இரண்டு மாஸ் ஹீரோக்கள் இணைந்து இந்த படத்தில் கலக்கி இருந்தார்கள். மேலும், இந்த படத்தில் ராம் சரண் போலீசாக மிரட்டியிருப்பார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருந்தது.

ராம்சரண் – சங்கர் திரைப்படம் :

இதனைத் தொடர்ந்து ராம்சரண் அவர்கள் ஷங்கர் இயக்கத்தில் ஆர் சி 15 என்ற படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தை பெரும் பொருட்செலவில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் உருவாக்கி வருகிறது. படத்தில் இவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. கூடிய விரைவில் இந்த படம் வெளியாக இருக்கிறது.

-விளம்பரம்-

குழந்தை குறித்து ராம்சரண் :

இதனிடையே நடிகர் ராம்சரண் அவர்கள் 2011ஆம் ஆண்டு உபாசனா காமினேனி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிவிட்டது.அதோடு இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இது குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி கொண்டே தான் இருந்தார்கள். இது குறித்து ராம் சரண் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார். சிரஞ்சீவியின் வாரிசாக மக்களை மகிழ்விக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது.

உபஸ்னாவுக்கு வளைகாப்பு

எனக்கு என்று சில இலக்குகள் இருக்கின்றது. அதேபோல் என்னுடைய மனைவிக்கும் இலக்குகள் இருக்கின்றது. குழந்தை பிறந்த பிறகு நாங்கள் இருவரும் இலக்கில் இருந்து விலக வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.அதனால் நாங்கள் தற்போது குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை. சில வருடங்கள் கழித்து இது குறித்து யோசிப்போம் என்று கூறியிருந்தார். இப்படி ஒரு நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது மனைவி கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து இருந்தார் ராம் சரண். இப்படி ஒரு நிலையில் ராம் சரண் மனைவி உபஸ்னாவுக்கு வளைகாப்பு நடந்து முடிந்திருக்கிறது.

Advertisement