இந்த இருவரில் மக்கள் கருத்துப்படி இந்த வாரம் ஐஸ்வர்யா தான் வெளியேறுவார் என்று கருதப்பட்டு வந்தாலும், இந்த வாரம் ரம்யா தான் வெளியேற்றபடுவார் என்ற சில தகவல்கள் வெளியாகியுள்ளது. இதை உண்மைப்படுத்தும் வகையில் ரம்யா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் புகைப்படம் ஒன்று
வெளியானது.
இந்த வாரம் வெளியான ப்ரோமோ விடியோவிலும், நிகழ்ச்சியிலும் ரம்யாவையே குறிவைத்து காட்டுகின்றனர் என்பது நன்றாகவே தெரிந்தது. ஏற்கனவே கடந்த வாரம் யாஷிகா மற்றும் நித்யாவிற்கு எதிரான எலிமினேஷன் போட்டியில் யாஷிகா தான் வெளியேறுவார் என்று மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால், நித்யாவால் நிகழ்ச்சியை சுவாரசியமாக எடுத்து செல்லமுடியாது என்று எண்ணிய பிக் தந்திரமாக யாஷிகாவை பிக் பாஸ் வீட்டில் தக்கவைத்து கொண்டது.
அதே நிலைப்பாட்டை தான் ரம்யா விடயத்தில் கையாண்டு வருகின்றனர். ஐஸ்வர்யாவை விட ரம்யா அத்து மீறி ஒன்றும் நடக்கவில்லை. ஆனால், ஐஸ்வர்யா இருந்தால் தான் நிகழ்ச்சியை சற்று சுவாரசியமாக நகர்த்தி விடலாம் என்று பிக் பாஸ் யூகித்து வருகிறது. அதனால் தான் அவருக்கு இந்த வாரம் ஒரு ஸ்பெஷல் பவரையும் அளித்துள்ளது. ரம்யா மீது மக்களுக்கு தவறான பிம்பம் எழவேண்டும் என்பதற்காகவே இந்த வாரம் முழுக்க ரம்யா கோவப்படும் காட்சிககளையும், பிறரை பற்றி குறை கூறும் காட்சிகளை தான் அதிகம் காண்பித்து வந்தனர்.
ஆனால், பிக் பாஸ் வீட்டில் அத்துமீறி நடந்து வரும் ஐஸ்வர்யாவின் செயல்களை பிக் பாஸ் எபிசோடில் காண்பிக்க மறுக்கிறது. இந்த வாரம் மிட் நைட் மசாலாவில் வெளியான சில விடீயோக்களில் ஐஸ்வர்யா அத்து மீறி தான் நடந்து கொண்டிருந்தார். குறிப்பாக சமீபத்தில் வெளியான மிட் நைட் மசாலா வீடியோவில் ஐஸ்வர்யா, எனக்கு ஒரு சுமோக்(cigarette) கொடு என்று கேட்டு ஸ்மோக்கிங் ரூமுக்குள் சென்றுவிடுவார்.அதுமட்டும் இன்றி சென்றாயனை தரக்குறைவாக பேசி இருப்பார்.யாஷிகா எங்கே ..சென்ராயன் எங்கே என மோசமாக பேசியிருப்பார்.ஆனால், இவற்றை ஏன் தொலைகாட்சியில் காண்பிக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது.
இதையெல்லாம் காட்டினாள் ஐஸ்வர்யா மீது தவறான எண்ணம் எழுந்து அவர் வெளியேறிவிடுவார் என்று எண்ணியே இது போன்ற காட்சிகளை தொலைக்காட்சியில் ஒளிபரப்பபடவில்லையோ என்ற எண்ணமும் எழுகிறது. எனவே, தனது டிஆர்பிக்கு ஏற்றார் போல போட்டியாளர்களை பகடைகாயாக தான் பிக் பாஸ் பயன்படுத்தி வருகிறார்.




