படையப்பா படத்திற்கு பின்னர் மீண்டும் ரஜினியுடன் இணையும் பிரபலம் – பீஸ்ட்டில் விட்டதை பிடிக்க நெல்சன் போட்ட பக்கா பிளான்.

0
501
Thalaivar169
- Advertisement -

-விளம்பரம்-

படையப்பா படத்திற்கு பின்னர் மீண்டும் ரஜினியுடன் இணையும் பிரபலம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. உலகம் முழுவதும் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். 80 காலகட்டம் தொடங்கி தற்போது வரை இவர் எண்ணற்ற படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றிருக்கிறது. அதோடு இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளார்கள்.

- Advertisement -

சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் வசூலில் கோடிகளை குவித்து இருக்கிறது. குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும், குடும்ப பாசத்தையும் மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருந்தது. இந்த படத்தில் குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் அவர்கள் தலைவர் 169 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் நெல்சனும், ரஜினிகாந்தும் இணைந்து பண்ணுகிறார்கள்.

நெல்சனின் திரைப்பயணம்:

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக நெல்சன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா என்ற படத்தை இயக்கியதன் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு இயக்குனராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படத்தை இயக்கி இருந்தார். இந்த படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. சமீபத்தில் நெல்சன் அவர்கள் விஜய்யை வைத்து பீஸ்ட் என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படம் ஏப்ரல் 13 ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடப்பட்டுள்ளது.

-விளம்பரம்-

தலைவர் 169 படம்:

இதனை தொடர்ந்து தற்போது நெல்சன் ரஜினியை வைத்து படம் பண்ணுகிறார். மேலும், நெல்சன்- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-அனிரூத் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு ‘தலைவர் 169’ என்று பெயரிடப்பட்டு உள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இதற்கான வீடியோ ஒன்றையும் அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தார்கள். வீடியோவில் ரஜினி, நெல்சன் மற்றும் அனிரூத் மூவரும் செம்ம மாஸாக இருந்தார்கள். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

தலைவர் 169 படம் குறித்த தகவல்:

மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.இந்நிலையில் தலைவர் 169 படத்தில் நடிக்கும் நடிகை குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அவர் வேற யாரும் இல்லைங்க, நீலாம்பரி ரம்யா கிருஷ்ணன் தான். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்த படையப்பா படத்தில் நீலாம்பரி என்ற கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருந்தார். இதில் ரஜினிக்கு எதிராக மோதும் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் தான் இவருக்கு பெரிய புகழை பெற்றுத் தந்தது. இது அனைவருக்கும் தெரிந்தது.

ரஜினி- ரம்யா கிருஷ்ணன் கூட்டணி:

அதற்கு பிறகு இவருக்கு அமைந்த அழுத்தமான கதாபாத்திரம் என்றால் பாகுபலி சிவகாமி கதாபாத்திரம் தான். தற்போது இவர் ரஜினியின் அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும், அந்த கதாபாத்திரம் அனேகமாக நீலாம்பரி கதாபாத்திரம் போல் நெகட்டிவ் ஆக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது ரம்யா கிருஷ்ணனும் இணைய இருக்கும் தகவல் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement