ரசிகர்கள் கொண்டாடிய ‘காந்தாரா’ படம் குறித்து ரங்கராஜ் பாண்டே சொன்ன கருத்து.

0
412
Rangaraj pandey
- Advertisement -

காந்தாரா படம் குறித்து நடிகரும், பத்திரிகையாளருமான ரங்கநாதன் பாண்டே பதிவிட்டு இருக்கும் டீவ்ட் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இந்திய சினிமா உலகில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படங்களில் ஒன்று கே ஜி எஃப். இந்த படத்தை ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தயாரிப்பாளர் விஜய் பிலிம்ஸ் தயாரித்திருந்தார். இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தான் சமீபத்தில் வெளிவந்த காந்தாரா என்ற படத்தை தயாரித்திருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் ரிஷப் ஷெட்டி, அச்சுத் குமார், சப்தமி கௌடா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அரவிந்த் எஸ் காஷ்யப் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அஜனீஷ் எஸ் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் ஹீரோவாக நடித்த ரிஷப் ஷெட்டி தான் படத்தை இயக்கியும் இருக்கிறார். இந்த படம் சமீபத்தில் தான் கன்னட மொழியில் வெளியாகி இருந்தது. இந்த படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்று இருக்கிறது.

- Advertisement -

காந்தாரா படம்:

மேலும், தமிழில் இந்த படம் அக்டோபர் 15 ஆம் தேதி வெளியாகி இருக்கிறது. ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தான் இந்த படத்தை தமிழகம் முழுவதும் வெளியிட்டு இருக்கிறார். தமிழகத்திலும் காந்தாரா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. இதனை அடுத்து இந்த படத்தின் இயக்குனரும், நடிகரும் ஆன ரிஷப் செட்டி சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து படம் குறித்து பேசி இருந்தார்.

படம் குறித்த தகவல்:

மேலும், இந்த படம் தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பழமொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகியிருந்தது. இந்த படம் பிறமொழி ரசிகர்கள் மத்தியிலும் கொண்டாடப்பட்டு இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் படத்தை பார்த்து திரைப்பிரபலங்கள் மற்றும் சினிமா விமர்சனங்கள் என பலருமே பாராட்டி இருக்கின்றனர். அந்த வகையில் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் காந்தாரா படத்தை பார்த்து படக்குழுவினரை பாராட்டி இருந்தார்.

-விளம்பரம்-

வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள்:

இவரை அடுத்து நடிகர் தனுஷும் காந்தாரா படத்தை பார்த்து பிரம்மிப்பாக இருந்தது, கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என்று பாராட்டி இருந்தார். சிம்புவும் பட குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு கேக் அனுப்பி இருந்தார். இவர்களைத் தொடர்ந்து கார்த்தி, ரிசப் செட்டியை நேரில் சந்தித்து பாராட்டி இருந்தார். இப்படி பல பிரபலங்கள் காந்தாரா படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் ரங்கநாதன் பாண்டே அவர்கள் காந்தாரா படம் குறித்து டீவ்ட் போட்டிருக்கிறார்.

ரங்கநாதன் பாண்டே டீவ்ட்:

அதில் அவர், கோடிக்கணக்கான ஆண்டுகள் உருவான இந்த மண்ணின் கதை. கடவுளே மனிதன், மனிதனே கடவுள் என்னும் தத்துவமசி நிலை. தமிழ் அவதார். இசை, நடிப்பு, திரைக்கதை என ஒவ்வொன்றிலும் பின்னி பெடல் எடுத்திருக்கும் காந்தாரா படம் பார்த்தேன். சிலிர்த்தேன், அடேயப்பா அற்புதம். மொழிகளை தாண்டியது கலை என்பதற்கு இன்னொரு உதாரணம். தவறவிடாதீர்கள், இந்த அனுபவத்தை என்று கூறியிருந்தார்.

Advertisement