பிரெஸ் மீட்ல எங்க சானக்கியா ரிப்போர்ட்டர் தான் அந்த கேள்விய கேட்டார், ஆனா மணிரத்னம் மலிப்பி விட்டு சென்று விட்டார் – ரங்கராஜ் பாண்டே.

0
442
rangaraj
- Advertisement -

பொன்னியின் செல்வன் படத்தில் வரும் நாராயணா வார்த்தை குறித்து மணிரத்தினத்தை ரங்கநாதன் பாண்டே வெளுத்து வாங்கி இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அனைவரும் எதிர்பார்த்து காத்து இருக்கும் பொன்னியின் செல்வன் படம் வெளியாக இன்னும் சில மணி நேரங்களே இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் மணிரத்தினம் தான் இயக்கி இருக்கிறார். இயக்குனர் எப்போதும் வித்யாசமான கதைகளை இயக்கி உலகிற்கு கொடுப்பதில் கைத்தேர்ந்தவர். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது.

-விளம்பரம்-

அந்த வகையில் தற்போது இயக்குநர் மணிரத்னத்தின் பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக இயக்கி இருக்கிறார். இதை கதையை பல பேர் முயற்சி செய்து இருந்தார்கள். ஆனால், அதை மணிரத்னம் தான் சாதித்து காட்டி இருக்கிறார். மேலும், பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக திரைக்கு வர இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் மணிரத்னத்தின் திரைவாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக இந்த திரைப்படம் தயாராகி இருக்கிறது.

- Advertisement -

பொன்னியின் செல்வன் படம்:

இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், கார்த்தி, ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் என சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் வெளியிட இருக்கிறார்கள். இந்த படத்தில் ரவிவர்மன் ஒளிப்பதிவாளராகவும், தோட்டாதரணி கலை இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார்கள்.

படம் குறித்த தகவல்:

சமீபத்தில் தான் பொன்னியின் செல்வன் படத்தின் டீசர்,ட்ரைலர் எல்லாம் வெளியாகி இருந்தது. அதோடு ஒவ்வொரு மாநிலத்திலும் படத்தை விளம்பரம் செய்யும் பணியில் படக்குழு ஈடுபட்டு இருக்கிறார்கள். இந்நிலையில் பொன்னியின் செல்வன் ட்ரைலரில் வந்த நாராயணா வார்த்தை குறித்து ரங்கநாதன் பாண்டே அளித்து இருக்கும் பேட்டி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, ட்ரைலரில் நம்பியாக நடித்து இருக்கும் ஜெயராம் ஒரு காட்சியில் ‘ஐயயோ’ என்று அலறி இருப்பார். இந்த வசனம் தான் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

-விளம்பரம்-

நாராயணா வசனம் :

இதற்கு காரணம், இதே போல மற்ற மொழிகளில் வெளியான ட்ரைலரில் ‘ஐயயோ’ விற்கு பதிலாக ‘நாராயணா’ என்று கூறி இருப்பார் ஜெயராம். ஆனால், தமிழில் மட்டும் அவர் ‘நாராயணா’ என்று சொல்லாமல் ‘ஐயயோ’ கூறியது ஏன் என்று பலர் கேள்வி எழுப்பி இருக்கின்றனர். மேலும், சமீபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இதுகுறித்து மணிரத்னத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர் ‘நாராயாணா, இப்படி ஒரு கேள்விக்கு பதில் சொல்லனுமா ? நீங்கள் படம் பாருங்க. படம் முழுதும் நாராயணா என்று தான் சொல்வார் என்று கூறி இருந்தார்.

ரங்கநாதன் பாண்டே அளித்த பேட்டி:

இந்த நிலையில் இது குறித்து நடிகரும், பத்திரிகையாளருமான ரங்கநாதன் பாண்டே கூறியிருந்தது, பொன்னியின் செல்வன் ஒரு புதினம். ஐந்து மொழிகளில் படம் எடுத்து, நான்கு மொழிகளில் நாராயணா என்று சொல்லி, ஒரு மொழியில் மட்டும் ஐயயோ சொல்வது என்ன கணக்கு? அவர் என்னவோ நாராயணா என்று சொல்கிறார், இவர் என்னவோ அய்யய்யோ என்று சொல்கிறார். என்னதான் நடக்குது. இந்த கேள்வியை பிரஸ்மீட்டில் சாணக்கியர் டீமில் இருந்து ஒருவர் தான் மணிரத்தினத்திடம் கேள்வி எழுப்பியிருந்தோம். அவர் நாராயணா என்று சொல்லி மலிப்பி விட்டு சென்று விட்டார். உண்மையான காரணத்தை சொல்லவில்லை. அவரை பார்ப்பனர்களுக்கு எதிராக திருப்பிவிட்டார்கள் என்று மணிரத்தினத்தை தாக்கி ரங்கநாதன் பாண்டே அளித்து இருக்கும் பேட்டி வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement