நடிகைகள் என்றாலே சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கேள்விகளை எதிர்கொள்வது வழக்கம். அதனை ஒரு சிலர் கண்டுகொள்வது இல்லை ஒரு சிலர் அதனை சாதுர்யமாக எதிர்கொண்டு விடுகின்றனர்.
அந்த வகையில் நடிகை ராஷ்மி கௌதமிடம் உள்ளாடை குறித்து ட்விட்டர் வாசி ஒருவர் மோசமாக கேள்வி கேட்டுள்ளார். தமிழில் சாந்தனு நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான ‘கண்டேன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷ்மி கௌதம்.
அதன் பின்னர் தமிழில் மாப்பிள்ளை விநாயகர், ப்ரியமுடன் பிரியா போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழில் முன்னணி நடிகையாக வலம் வர முடையவில்லை என்றாலும் அம்மணி தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் ராஷ்மி கவுதமிடம் ஒரு நபர் ‘உங்க ப்ரா என்ன கலர்’ என ட்விட்டரில் கேட்க, அதற்கு மற்றொரு நபர் ‘உங்கள் அம்மா, சகோதரியிடம் இந்த கேள்வியை கேட்பியா?’ என கேட்டார்.அதை பார்த்த ராஷ்மி “அம்மா, சகோதரியையெல்லாம் இந்த பிரச்சனையில் இழுக்காதீர்கள். அவர்களும் இந்த முரடன் மீது விரக்தியில் தான் இருப்பார்கள்” என கூறி பதிலடி கொடுத்துள்ளார்.