பல நடிகையின் பயோபிக் படத்தில் நடிக்க ஆசைப்படுவதாக ராஷ்மிகா மந்தனா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் ரசிகர்களின் கிரஷ்ஷாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. ‘இன்கேம் இன்கேம் காவாலி’ என்ற ஒரே பாடல் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் ராஷ்மிகா. இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த கன்னட படத்தின் மூலம் தான் திரையுலகிற்கு அறிமுகமாகி இருந்தார்.
தனது முதல் படத்திலேயே இவர் அனைவர் மனதையும் கொள்ளையடித்தார். பின் நடிகர் விஜய் தேவர் கொண்டாவுக்கு ஜோடியாக இரண்டு படங்களில் ராஷ்மிகா நடித்து இருந்தார். இந்த இரண்டு படங்களும் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. பின் தமிழில் கார்த்தி உடன் இணைந்து சுல்தான் என்ற படத்தில் நடித்து இருந்தார். இதனை அடுத்து கடந்த ஆண்டு விஜய்யின் வாரிசு படத்தில் ராஸ்மிகா நடித்து இருந்தார். இந்த படத்தை வம்சி பைடிபள்ளி இயக்கி இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தையும், வசூலையும் வாரி குவித்து இருந்தது.
ராஷ்மிகா மந்தனா திரைப்பயணம்:
இதனை அடுத்து ராஷ்மிகா மந்தனா தெலுங்கு, தமிழ், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு ஹிந்தியில் இவருடைய நடிப்பில் வெளியாகியிருந்த படம் மிஷன் மஜ்னு. பின் சமீபத்தில் தற்போது இவர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் அனிமல். இந்த படத்தில் ரன்பீர் கபூர் கதாநாயகனாக இந்த இவர்களுடன் இந்த படத்தில் அனில் கபூர், பாபி தியோல் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்கி இருக்கிறார்.
அனிமல் படம்:
மேலும், டி சீரீஸ் ஃபிலிம்ஸ், பத்ரகாலி பிக்சர்ஸ் மற்றும் இனி ஒன் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இனி இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. பல எதிர்பார்ப்புகள் மத்தியில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது. இருந்தாலும், இந்த படம் நல்ல வசூல் சாதனை செய்து செய்திருந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து இவர் தமிழில் தனுசுக்கு ஜோடியாக டி51 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு தான் இந்த படத்தினுடைய படப்பிடிப்பில் துவங்கியிருக்கிறது.
ராஷ்மிகா நடிக்கும் படங்கள்:
பின் தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடித்திருக்கும் புஷ்பா 2 படத்தில் ராஷ்மிகா நடித்திருக்கிறார். இது தவிர தி கேர்ள் ஃப்ரெண்ட், ரெயின்போ போன்ற படத்திலும், ஹிந்தியில் சாவா என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் ராஷ்மிகா சமீபத்தில் அளித்த பேட்டியில், எனக்கு மறைந்த நடிகை சௌந்தர்யாவின் பயோபிக் படத்தில் நடிக்க விருப்பம் இருக்கிறது. சிறுவயதிலிருந்தே என்னுடைய அப்பா சௌந்தர்யாவை போல இருப்பதாக என்னை சொல்வார்.
சௌந்தர்யா பயோபிக் படம்:
அது எனக்கு பெருமையாக இருக்கும். வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்று கூறியிருக்கிறார்.
: இந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் சௌந்தர்யா. இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் போன்ற பல மொழி படங்களில் நடித்திருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் சௌந்தர்யா தன்னுடைய 31 வயதில் அநியாயமாக விமான விபத்தில் உயிரிழந்திருந்தார். தற்போது இவருடைய பயோபிக் திரைப்படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இதில் கதாநாயகியாக யார் நடிக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.