அசீம் வெற்றியை கழுவி ஊற்றி போடப்பட்ட பதிவை பகிர்ந்த அஸ்வினின் மனைவி – அதே பதிவை பாராட்டிய மகேஸ்வரி.

0
1089
azeem
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் நிறைவடைந்தது 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் அசீம், விக்ரமன் சிவின் ஆகிய மூன்று பேர் தகுதி பெற்று இருந்தார்கள். இதில் அசீம் முதலிடத்தையும் அவரைத் தொடர்ந்து விக்ரமன் மற்றும் சிவின் ஆகிய இருவரும் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்து இருந்தார்கள். முதல் பட்டத்தை வென்ற அசிமிற்கு 50 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், அவருக்கு சிறப்பு பரிசாக ஒரு புதிய மாருதி கார் வழங்கப்பட்டு இருந்தது.

-விளம்பரம்-

இந்த சீஸனில் விக்ரமன் தான் வெல்வார் என்று பலரும் எதிர்பார்த்துவந்தனர். இப்படி ஒரு நிலையில் அசீம் வென்றதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இந்த முடிவால் அதிருப்தி அடைந்து இருக்கின்றனர். அப்போ அடாவடியாக ஆடி, மற்றவர்களை இழிவுபடுத்தி விளையாடினால் பிக் பாஸில் வென்று விடலாமா என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர். மேலும், விஜய் டிவிக்கு எதிராக Boycott விஜய் டிவி என்று ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வரும் ரசிகர்கள் விக்ரமன் ஹேஷ் டேக்கையும் ட்ரெண்ட் செய்து வந்தனர்.

- Advertisement -

அதே போல பொதுவாக வெற்றியாளரை தான் முதலில் பேச வைப்பார்கள். ஆனால், அஸீமிடன் கோப்பையை கொடுத்துவிட்டு கமல், விக்ரமனை தான் முதலில் பேச வைத்தார். இதையெல்லாம் காரணமாக சொல்லி நெட்டிசன்கள் பலரும் கமலுக்கே அசீம் வென்றது பிடிக்கவில்லை என்பது போல கூறி வருகின்றனர்.இந்த சீசன் ஆரம்பித்ததில் இருந்தே அசீம் மற்றும் விக்ரமனுக்கு தான் அடிக்கடி சண்டை வந்தது.

அப்படி சண்டை வரும் போதெல்லாம் வார இறுதியில் பஞ்சாயத்து செய்யும் கமல், பெரும்பாலும் விக்ரமன் பக்கம் நின்று தான் நியாயம் பேசினார். விக்ரமன் ஒரு அரசியல் கட்சியை சேர்த்தவர் என்பதால் தான் விக்ரமனுக்கு கமல் ஆதரவாக பேசுகிறார் என்று அடிக்கடி அசீம் ரசிகர்கள் விமர்சனம் செய்து வன்தனர். பலரும் விக்ரமன் தான் வெற்றிபெறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அசீம் வெற்றி பெற்றது பெருத்த அதிர்ச்சியை கொடுத்து இருந்தது.

-விளம்பரம்-

என்னதான் அசீம் பட்டத்தை வென்றாலும் கடந்த இரண்டு தினங்களாக விக்ரமன் தோற்றத்தை பற்றி தான் சமூக வலைதளத்தில் பேசி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் அசீம் வெற்றி பெற்றது பிக் பாஸ் ரசிகர்கள் பலரையும் அதிருப்தியில்ஆழ்த்தி இருப்பதாக பிரபல ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டு இருந்தது. அதில் சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ஜெய ஜெய ஜெய ஹே படத்தில் வரும் மோசமான ஆண் கதாபாத்திரத்துடன் அசீமை ஒப்பிட்டு ஒரு டாக்ஸிக் மனநிலையை கொண்ட ஒரு நபர் எப்படி இந்த நிகழ்ச்சியில் வென்றார் என்று கேள்வி எழுப்பி இருக்கிறது,

மேலும், பல்வேறு நபர்கள் தங்களுக்கு மெசேஜ் அனுப்பி வருவதாகவும் அஸீமின் இந்த வெற்றி சமூகத்திற்கு மிகவும் தவறான உதாரணம் என்றும் வீட்டில் உள்ள அனைவரையும் மோசமாக பேசி மற்றவர்களை தரம் தாழ்ந்து பேசியவர், திருநங்கை சிவினை எவ்வாறு அவமானப்படுத்தினார் என்பதையும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் பிக் பாஸ் வீட்டில் இதற்கு முந்தைய போட்டியாளர்களாக கலந்து கொண்ட அனிதா,அர்ச்சனா ஆகியோர் தங்கள் கோபத்தை வெளிப்படுத்திய போது அனைவரும் கேள்வி கேட்டார்கள்.

ஆனால், அவர்கள் அசீம் செய்ததில் ஒரு சதவீதத்தை கூட செய்யவில்லை. ஒரு பெண் கோவத்தை வெளிப்படுத்தினால் மட்டும் இந்த சமூகம் கேள்வி கேட்குமா ? என்றெல்லாம் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த பதிவினை பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வினின் மனைவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், இந்த பதிவை கண்ட மகேஸ்வரியும் அருமையான பதிவு என்று இந்த பதிவை பாராட்டி இருக்கிறார்.

Advertisement