எங்க கதை தான் எதிர்நீச்சல் சீரியல், மாரிமுத்துவ பார்க்கவே முடியல- உண்மையான எதிர்நீச்சல் குடும்பம் அளித்த பேட்டி

0
2043
- Advertisement -

உண்மையான எதிர்நீச்சல் குடும்பம் அளித்திருக்கும் பேட்டி வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் டிஆர்பியில் உச்சத்தில் இருக்கும் சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் தான். தற்போது இந்த சீரியல் தான் பட்டிதொட்டி எங்கும் பிரபலம். சீரியல் இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், இந்த சீரியல் அடக்கு முறைக்கு உட்படும் பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. இந்த சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வருகிறார். மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன், தம்பிகள் வாழ்கிறார்கள். இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டு இருக்கிறார்கள். அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்கள் எல்லாம் வீட்டு வேலை செய்யும் வேலைக்காரர்களாக நடத்தி வருகிறார்கள். அதுவும் அதிகம் படித்த பெண்களை தேடி சென்று திருமணம் செய்கிறார்கள். அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாமல் அந்த பெண்களும் அமைதியாக இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் தான் ஜனனி இந்த வீட்டின் கடைசி மருமகளாக வருகிறார்.

- Advertisement -

எதிர்நீச்சல் சீரியல்:

ஜனனி அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார். இதனால் வீட்டில் பல பிரச்சனைகள் நடக்கிறது. பின் மற்ற பெண்களும் தங்களின் உரிமையை கேட்டு போராடுகிறார்கள். இப்படி சீரியல் பரபரப்புடனும் விறுவிறுப்பாகவும் சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் சீரியலில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து திடீரென்று இறந்திருப்பது பலருக்குமே பேரதிர்ச்சியாக இருக்கிறது. குறிப்பாக எதிர்நீச்சல் ரசிகர்கள் பலருமே தங்களுடைய வருத்தத்தை தெரிவித்திருந்தார்கள். அடுத்த குணசேகரன் யார் என்றும் ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்து வருகிறது. இருந்தாலுமே மாரிமுத்துவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்று வருத்தத்துடன் பலரும் தெரிவித்து வருகிறார்கள்.

உண்மையான எதிர்நீச்சல் குடும்பம் அளித்த பேட்டி:

இந்த நிலையில் எங்கள் குடும்பத்தை வைத்து தான் எதிர்நீச்சல் சீரியல் எடுத்திருக்கிறார்கள் என்று உண்மையான எதிர்நீச்சல் குடும்பம் அளித்திருக்கும் பேட்டி வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் அவர்கள், என்னுடைய கதாபாத்திரத்தில் தான் ஆதி குணசேகரன் என்பவர். நடித்திருக்கிறார். என்னுடைய நண்பர் பாரதி கண்ணன் அவர் தான் திருச்செல்வத்தை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர் என்னிடம் வந்து எங்களுடைய குடும்பத்தை பற்றி விசாரிக்கும் போது நான் என்னுடைய தம்பிகள் என்னுடைய அப்பா சிறு வயதிலேயே இறந்தது.கொஞ்சம் கொஞ்சமாக கஷ்டப்பட்டு படிப்படியாக முன்னேறி இந்த அளவிற்கு நாலு பேரு மதிக்கும் அளவிற்கு வந்திருப்பது என்று அரை மணி நேரம் என்னுடைய வாழ்க்கை கதையை சொன்னேன்.

-விளம்பரம்-

சீரியல் குறித்து சொன்னது:

உடனே அவர் உங்களுடைய கதையை சீரியலாக எடுக்கலாமா? நீங்கள் செய்கிறீர்களா? என்று கேட்டார். எனக்கு தெரியாத தொழில் செய்ய விருப்பமில்லை. உங்களுக்கு என்ன தோன்றுதோ செய்யுங்கள் என்று சொன்னேன். அதை போல் தான் அவரது செய்திருக்கிறார். சீரியலுக்கு ஏற்றவாறு மக்கள் ரசிக்கும் வகைக்கு ஏற்றவாறு கதைகளையும் வசனங்களையும் கொடுத்திருக்கிறார். அந்த குணசேகரன் போல் நான் கரடு முரடானவன் இல்லை. நான் மென்மையானவன் தான். ஆனால், வீட்டில் நான் சொல்வதை தான் எல்லோரும் கேட்பார்கள் என்று கூறினார். இவரை அடுத்து உண்மையான கதிர்- ஞானம் கூறியிருப்பது, எங்களுடைய குடும்பத்தை தான் சீரியலில் எடுத்திருக்கிறார்கள்.

மாரிமுத்து குறித்து சொன்னது:

சீரியலில் வருவது போல ஆதி குணசேகரனுக்கு அடுத்தபடியாக கதிர் நான் தான் வருவேன். நாங்கள் நான்கு பேருமே மென்மையானவர்கள் தான். அண்ணா வந்தாலே வீட்டில் உள்ள எல்லோருமே அமைதியாக விடுவார்கள், பயப்படுவார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு மாரிமுத்து இடம் தொடர்பு கொண்டு சீரியலை பற்றியும் எங்களுடைய வீட்டு நிலவரத்தை பற்றியும் சொன்னேன். அவர் பாராட்டி நேரில் வந்து உங்களை சந்திக்கிறேன் என்று சொன்னார். அதற்குள் அவர் இறந்திருப்பது எங்களுக்கு வருத்தமாக இருக்கிறது. எப்படி சீரியலில் அப்பத்தா சொத்து பிரச்சனை சென்று கொண்டிருக்கிறதோ எங்களுடைய வாழ்க்கையிலும் தற்போது அப்பத்தா சொத்து பிரச்சனை தான் சென்று கொண்டிருக்கின்றது பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்கள்.

Advertisement