விஜய் டிவியை போல சன் தொலைக்காட்சியிலும் சினிமா டைட்டில்களை கொண்ட பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. வானத்தை போல. பூவே உனக்காக, ரோஜா என்று சினிமா டைட்டிலில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் பூவே உனக்காக சீரியல் சன் டிவியின் வெற்றிகரமான சீரியல்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கப்பட்ட இந்த சீரியல் வெற்றிகரமாக 250 எபிசோடுக்கு மேல் கடந்து இருக்கிறது. இந்த சீரியலில் கதிர் என்ற கதாபாத்திரத்தில் இந்த சீரியலின் நாயகனாக நடித்த அருண் இந்த சீரியலில் இருந்து விலகிவிட்டதாக அவரே தனது சமூக வலைதளத்தில் தெரிவித்து இருந்தார்.
இதுகுறித்து தெரிவித்த அவர், பூவே உனக்காக சீரியலில் இருந்து நான் விலகி இருப்பதை உங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். என்னை இனி கதிராக உங்களால் என்னை பார்க்க முடியாது. இப்படி ஒரு வாய்ப்பைக் கொடுத்த என்னுடைய தயாரிப்பாளருக்கும் சன் டிவிக்கும் நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தொடர்ந்து எனக்கு அன்பும் ஆதரவும் கொடுத்து வந்த ரசிகர்களுக்கு நன்றி. விரைவில் உங்களுக்கு ஒரு நல்ல செய்தியுடன் சந்திப்பேன்.
விலகிய ராதிகா :
உங்களின் அன்பும் ஆதரவும் எப்போதும் எனக்கு தேவை என்றும் உங்கள் அன்புடன் அருண் என்று பதிவிட்டு இருந்தார்.இப்படி ஒரு நிலையில் அவருக்கு பதிலாக விஜய் டிவியில் பல சிரியல்களில் நடித்த அஸீம் கமிட் ஆகி இருக்கிறார்.அசீம் வந்த பின்னர் இந்த சீரியல் Trpயில் படு அதிகம் எகிறியது. இப்படி ஒரு நிலையில் இந்த தொடரில் பூவரசி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த ராதிகா பிரீத்தி இந்த தொடரில் இருந்தார்.
இதுகுறித்து ராதிகா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டதாகவது ‘ கனத்த இதயத்தோடு பூவே உனக்காக தொடரில் இருந்து நான் விலகியிருப்பதை ரசிகர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன். எனக்கு வாய்ப்பு கொடுத்த சன் டிவிக்கும், புரொடக்ஷன் ஹவுஸூக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ரசிகர்கள் அனைவரும் கண்டிப்பாக என் வாழ்க்கையில் நடக்கும் அடுத்தடுத்த வெற்றிப்படிகளில் என்னுடன் இருப்பீர்கள் என எனக்குத் தெரியும்! உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்!.. இப்படிக்கு, பூவரசி!’ என கூறி இருந்தார்.
சம்பளத்தால் ஏற்பட்ட பிரச்சனை :
இப்படி ஒரு நிலையில் அவர் வெளியேறியதற்கான வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து தகவல் அறிந்தவர்கள் கூறுகையில், சமீபத்தில் அந்த சீரியல் ஹிட் ஆனதற்கு தான் மட்டுமே காரணம் என்று நினைத்த ராதிகா தன்னுடைய சம்பளத்தை கூட்டி கேட்டுள்ளார், ஆனால், அதற்கு சீரியல் குழு மறுத்ததால், தான் சீரியலை விட்டு வெளியேறுவதாக கூறுகிறார். இவரின் இந்த முடிவை கேட்டதும் அவர்கள் சம்பளத்தை உயர்த்துவார்கள் என்று ராதிகா எதிர்பார்த்தார்.
ராதிகாவிற்கு பதில் வந்த வர்ஷினி :
ஆனால், டக்கென்று போகனும்னா போங்க இன்று சீரியல் குழு சொன்னதை அவர் எதிர்பார்க்கவே இல்லை. தன்னுடைய விலகலை அறிவித்த அந்தப் பதிவி கூட ‘பூவரசி’ன்னு தன்னுடைய கேரக்டர் பெயரை அவர் குறிப்பிட்டிருந்ததைக் கவனிச்சீங்களா? ‘கொஞ்சம் அவசரப் பட்டுட்டோமோ’னு இப்போது அவர் நினைக்கறதா சொல்றாங்க என்று கூறி இருக்கிறார். ராதிகா வெளியேறியதை தொடர்ந்து தற்போது அவருக்கு பதிலாக சன் டிவியின் அக்னி நட்சத்திரம் சீரியலில் நடித்த வர்ஷினி கமிட் ஆகி இருக்கிறார்.