அம்மாவுக்கு அசைவம் ரொம்பவும் பிடிக்கும். அதிலும், என் வீட்டுச் செட்டிநாடு கோலா உருண்டை குழம்பை மிகவும் விரும்பிச் சாப்பிடுவார்.அந்த ஜாலியான விஷயம். இதை பப்பிம்மா என்னிடம் சொன்னபோது சிரித்துச் சிரித்து வயிறு வலித்தது. பப்பிம்மாவுக்குத் திருமணமாகி அமெரிக்கா சென்றிருந்த புதிது.
நாட்டியப் பேரொளியாக கோலோச்சியவருக்கு வெந்நீர்கூட வைக்கத் தெரியாதாம். கணவர் ராமச்சந்திரன், முருங்கைக்காய் சாம்பார் கேட்டிருக்கிறார். பப்பிம்மாவும் சமையல் புத்தகத்தைப் பார்த்து அருமையாகச் சாம்பார் வைத்து, கணவரிடம் பாராட்டும் வாங்கியிருக்கிறார். அதன்பிறகு நடந்ததுதான் காமெடி.
ஒருநாள் அவரின் அம்மாவிடம் போனில் பேசும்போது, 'சாம்பார் வைக்கிறதெல்லாம் கஷ்டமா இல்லைம்மா. ஆனால், அதுக்கு முருங்கைக்காய் வெட்டறதுக்குத்தான் ரொம்ப கஷ்டப்பட்டேன். ஒரே அளவா என்னால் வெட்டவே முடியலைம்மா. அதனால், முருங்கைக்காயை ஸ்கேலால் அளந்து பால் பாயிண்ட் பேனாவால் மார்க் பண்ணி வெட்டினேன்' என்றாராம். இதைச் சொல்லும்போது, பப்பிம்மா முகத்தில் அப்பாவி களை வரும் பாருங்கள். அந்தக் குழந்தைத்தனத்தைப் பார்த்து பார்த்து ரசித்துக்கொண்டே இருக்கலாம்'' எனச் சிரிக்கிறார் ஜெயந்தி.




