தமிழ் 2009 ஆம் ஆண்டு வெளியான ரேனிகுண்டா திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு நடிகையாக அறிமுகமானவர் நடிகை சஞ்சனா சிங். அந்த படத்தை தொடர்ந்து கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் நடித்தும் வருகிறார்.
மும்பையை சேர்ந்த இவர், ஆரம்பகாலத்தில் மாடலிங் துறைக்கு முயற்சி செய்திருந்தார். பின்னர் அது நடக்காமல் போக சினிமாவில் நுழைந்தார். இதுவரை 16 படங்களில் நடித்துள்ளார் சஞ்சனா சமீபத்தில் சன் தொலைக்காட்சியில் இவர் பங்கேற்ற கிராமத்தில் ஒரு நாள் நிகழ்ச்சி பெரும் வரவேற்பைப் பெற்றுத்தந்தது.
தமிழ் மற்றும் தெலுங்கு, இந்திப்படங்களிலும் நடித்துவரும் சஞ்சனாசிங் தயாரிப்பாளராக வேண்டும் என்கிற முயற்சியில் தற்பொழுது முதற்கட்டமாக ஆல்பம் ஒன்றை தயாரித்திருக்கிறார். சிங்கப்பூர், மற்றும் மும்பையில் படமாக்கப்பட்ட இந்த ஆல்பம் புதுமையான வகையில் படமாக்கப்பட்டிருக்கிறதாம்.
மும்பையில் பிரபல தொலைக்காட்சி நட்சத்திரங்கள் சிருஷ்டி மற்றும் ரோகித் சுஷாந்தி இதில் நடித்திருக்கிறார்கள். மேலும் பிரபல டிஜே பஞ்சோ குவாபோவும் நடித்திருக்கிறார். இந்த நிலையில் சஞ்சனாவின் சில லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில் இப்போது எப்படி உள்ளார் என்று பாருங்கள்.