வெளிய நிக்கறவன் எல்லாம் பைத்தியக்காரனா ? விஜயே உள்ளே போக முடியாது. விஜய் வீட்டின் முன்பு சலசலப்பு. வெளியில் வந்து மன்னிப்பு கேட்ட புஸ்ஸி ஆனந்த்.

0
1552
Vijay
- Advertisement -

நேற்று விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை விடை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில் விஜயின் வீட்டிற்கு வெளியில் பத்திரிக்கையாளர்களை நீண்ட நேரம் காக்க வைத்ததால் பத்திரிகையாளர்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கும் வீடியோவானது தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முடி சூடாக மன்னனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு கோடிக்கணக்கான பேர் ரசிகர்களாக இருக்கிறார்கள். இவருக்கு விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்கள் ரசிகர் மன்றம் வைத்து இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

-விளம்பரம்-

இப்படி இருக்கும் நிலையில் 2020 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள். இந்த வெற்றி அரசியல் வட்டாரத்தை கதிகலங்க வைத்தது. இப்படி விஜய் மக்கள் இயக்கம் அரசியலில் ஈடுபட்டாலும், தங்களின் ஜனநாயக கடமையை செய்வதில் தவறுவதில்லை. மேலும், விஜய் சினிமாவை தாண்டி பொதுநல சேவைகளையும் செய்து கொண்டு வருகிறார். இதனால் இவர் கூடிய விரைவில் அரசியலுக்கு வருவார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

விஜய் மக்கள் இயக்கம்:

அந்த வகையில் இவர் சமீபத்தில் தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் பத்தாம் மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்களில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை நடிகர் விஜய் நேரில் சந்தித்து வழங்கி இருந்தார். அது மட்டும் இல்லாமல் சில மாணவர்கள் வைத்த கோரிக்கைகளை விஜய் அவற்றை மேடையிலேயே நிறைவேற்றி இருக்கிறார்.

கிட்டத்தட்ட 12 மணி நேரத்திற்கு மேலாக இந்த விழா நடைபெற்றது. இந்த விழாவில் விஜய் அவர்கள் மாணவர்களின் எதிர்காலம், கல்வி, அரசியல், தலைவர்கள் குறித்தும் பல விஷயங்களை பேசி இருந்தார். இந்த நிகழ்வின் மூலம் விஜய் அரசியலுக்கு வருவதற்காக தான் செய்கிறார் என்றெல்லாம் பல தரப்பினர் மத்தியில் கருத்துக்கள் வந்தது. இந்த நிலையில் பனையூர் இல்லத்தில் மாவட்ட பொறுப்பாளர்களுடன் நடிகர் விஜய் அவர்கள் நேற்று முக்கிய ஆலோசனை மேற்கொண்டுஇருந்தார்.

-விளம்பரம்-

இந்த கூட்டத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக தொகுதி வாரியாக மக்கள் இயக்கத்தை பலப்படுத்தவது குறித்து ஆலோசனை நடத்தி இருப்பது தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் விஜய்யின் வீட்டின் முன்பு பத்திரிக்கையாளர்கள் சிலர் நீண்ட நேரமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள் இதனால் கடுப்பான பத்திரிக்கையாளர் ஒருவர் வண்டியை உள்ளே விட மாட்டோம் தனித்தனியாக கூப்பிட்டு என்ன செய்கிறீர்கள்.

காலையிலிருந்து 9 மணிகள் இருந்து நிற்கும் மற்றவர்கள் எல்லாம் பைத்தியக்காரர்களா. வண்டியை உள்ளே விடாமல் எல்லாரும் அப்படியே உட்கார்ந்து விடுவோம். ஒரு சேனல் மட்டும் வேண்டுமென்றால் அதை முதலிலேயே சொல்லி இருக்க வேண்டியதுதானே என்று ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார் எதனைத் தொடர்ந்து வீட்டின் உள்ளே இருந்து வெளியில் வந்த விஜயின் மேலாளர் புஸ்ஸி ஆனந்த் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்டார்.

Advertisement